Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
திருமணமான இரண்டே நாளில் புருசனை தவிக்கவிட்டு புதிய காதலரை தேடிச்சென்ற நடிகை.. கொண்டாட்டத்தில் முதல் கணவர்
இப்படி ஒரு நடிகை சினிமாவுக்கு தேவையான தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து சினிமா உலகங்களும் காரித்துப்பும் அளவுக்கு கேவலமாக நடந்து கொள்கிறாராம் அந்த பிரபல நாயகி.
முதல் படமே கிளுகிளுப்பான படத்தின் மூலம் அறிமுகமான அந்த நாயகி அதன்பிறகு கிளாமர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அத்தி பூத்தாற் போல் அவ்வபோது இழுத்து போத்தி கொண்டு நடித்தும் உள்ளார்.
அப்படியிருக்கும்போது தான் அந்த பிரபல இயக்குனர் இந்த நாயகியின் மீது ஆசைப்பட்டு காதல் திருமணம் செய்து கொண்டார். சூடு கண்ட பூனை அடுப்பண்டை சேராது என்பதை போல சுற்றித்திரிந்த நாயகி ஒரே வீட்டில் அடங்க மாட்டார் என்பது போகப்போகத்தான் அந்த இயக்குனருக்கு தெரிந்துள்ளது.
உடனே விவாகரத்து செய்து பொடனியில் அடித்து பத்தி விட்டார். அதன்பிறகு வாழ்வே மாயம் என நாடகம் போட்ட அந்த நாயகி, வடமாநில பாடகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளிவந்தது. அதனை உறுதியாக்கும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டனர்.
சரி பாவம், முதல் திருமணம் தான் சரியாக இல்லை, அதனால் நாம் வாழ்க்கை கொடுப்போம் என கொடுத்தவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டார் நம்ம நாயகி. திருமணமான இரண்டே நாட்களில் பாடகரை விட்டுவிட்டு பாலிவுட் நடிகர் ஒருவரிடம் ஒன்றுசேர்ந்து விட்டாராம்.
அதற்கு காரணமே சமீபத்தில் லீக்கான திருமண புகைப்படங்கள் தானாம். நீண்ட நாட்களாக நட்பு பாராட்டி வந்த பாடகர் ஒருமுறை நடிகையிடம் திருமணம் செய்துகொள்ள கேட்டாராம். அதற்கு அந்த நாயகி, சுத்துற வரை சுத்து, இல்லனா கெளம்பு என அப்பவே சிக்னல் கொடுத்துள்ளார்.
அது தெரியாமல் பாடகரும் குடும்ப பிரஷர் தாங்கமுடியாமல் நடிகையிடம் கூற, அவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறிவிட்டார். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட். நம்ம திருமணம் செய்து கொள்வது யாருக்குமே தெரியக் கூடாது எனவும் சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.
திருமணத்திற்கு பிறகு குடி, கூத்து, ஆண் நண்பர்கள் பழக்கவழக்கம், மிட்நைட் பார்ட்டிகள், மிட்நைட் மசாலா என இஷ்டத்துக்கு இருந்துள்ளார் அந்த நாயகி. மேலும் திருமணத்தின் போதே, நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், என்னை எதுவும் கேட்க கூடாது எனக் கூறிவிட்டு தான் திருமணம் செய்து கொண்டாராம்.
திருமணத்திற்கு பிறகு திருத்தி விடலாம் என நினைத்த அந்த பாடகர், திருமண புகைப்படத்தை வெளியிட்டால் நாயகி வழிக்கு வந்து விடுவார் என நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.
இதை கண்ட அந்த நாயகி பாடகரை சகட்டு மேனிக்கு திட்டி விட்டாராம். அந்த பாடகரும் உன் இஷ்டத்துக்கு இருக்கிறது இது ஒன்னும் சத்திரம் இல்லை என கண்டபடி பேச முடிவுக்கு வந்தது நாடக கல்யாணம்.
நான் அப்பவே சொன்னேனே அந்த நடிகை சரியில்லை என்று நடிகையின் முதல் கணவரும் இயக்குனரும் இதைப் பார்த்து கைகொட்டி சிரித்து வருகிறாராம். என்ன பொழப்பு இதெல்லாம்!
