தாத்தாவுடன் சேர்ந்து ஆப்படிக்க போகும் எழில்.. மரண பயத்தில் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த வாரம் முழுவதும் சமுதாய பிரச்சனைகளை பற்றியும், அது தொடர்பான காட்சிகளையும் நமக்கு காட்டியது.

அதைத் தொடர்ந்து இந்த வாரம் மீண்டும் கோபி, ராதிகாவின் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் கோபி தன் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் காட்டப்பட்டுள்ளது.

அதில் கோபியின் அம்மா அவர் கணவரிடம் உங்களுக்கும், கோபிக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். இதனால் கோபமாகவும் அவர் கோபியிடம் அதை கேள் என்று சொல்கிறார். எப்படியாவது பிரச்சினை வெடித்து வீட்டை விட்டு வெளியேறினால் போதும் என்று நினைக்கும் கோபி தன் அப்பாவிடம் நீங்களே சொல்லுங்க என்று கூறுகிறார்.

கோபி செய்யும் இந்த கேவலமான விஷயத்தை வெளிப்படையாக கூற முடியாமல் அவரின் அப்பா இந்த வீட்டின் சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம், அதற்கு இடையூறாக யாராவது இருந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டு செல்கிறார்.

கோபமாக இருக்கும் தன் தாத்தாவை பார்க்க வரும் எழில் அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். கோபியின் அப்பா அதற்கு பதில் கூறாமல் சமாளிப்பாக ஏதோ பேசிவிட்டு செல்கிறார். தன் தாத்தாவை தடுத்து நிறுத்தும் எழில் எனக்கும் சில விஷயங்கள் எல்லாம் தெரியும் என்று சொல்கிறார்.

இதனால் அதிர்ந்து போகும் அவர் என்ன விஷயம் தெரியும் என்று கேட்கிறார். அதற்கு எழில் அப்பா இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது எனக்கு தெரியும் என்று உண்மையை போட்டு உடைக்கிறார். இவ்வாறு அந்த ப்ரோமோ முடிகிறது.

வீட்டின் மூத்த தலை முறையான கோபியின் அப்பா வெளியில் சொல்ல முடியாமல் மறைத்த விஷயத்தை, இளைய தலை முறையான எழில் பட்டென்று கூறுகிறார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து கோபியின் அட்டகாசத்திற்கு ஒரு முடிவு எடுப்பார்கள்.

உண்மை தெரிந்து விட்டால் அதை சாக்காக வைத்து எப்படியாவது விவாகரத்து பெற்று ராதிகாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கனவில் இருக்கும் கோபிக்கு இனிமேல் தான் அடுத்தடுத்து சிக்கல்கள் வர இருக்கிறது. இனி வரும் வாரங்களில் இது போன்ற சுவாரஸ்யமான கதைக்களத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் நகர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்