3 பிளேட் பிரியாணி சாப்பிடும் மூத்த நடிகை.. எல்லாம் நம்ம சிம்பு பார்த்த வேலை

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகைகள் பத்தாண்டுகள் வரை தான் ஹீரோயின்களாக நடிக்க முடியும். அதன்பிறகு அம்மா, அக்கா, குணச்சித்திர வேடங்களில் நடிப்பார்கள். ஆனால் நடிகை திரிஷா சினிமாவிற்கு வந்து 19 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார்.

அதற்கு முக்கிய காரணம் திரிஷா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இன்று வரை இளமையுடன் இருக்கும் திரிஷாவுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியமாம். திரிஷா பிராமண குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அசைவப் பிரியராம்.

பிரியாணி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் திரிஷா தொடர்ச்சியாக மூன்று பிளேட் பிரியாணி சாப்பிடும் அளவுக்கு பிரியாணி வெறியராம். பிரியாணி என்றால் போதுமாம் வெளுத்து வாங்குவாராம். என்னதான் பிரியாணி பிரியராக இருந்தாலும் இந்த அளவுக்கா என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

திரிஷா இதுபோல் பிரியாணி சாப்பிட ட்ரெய்னிங் கொடுத்ததே நம்ம சிம்புதானாம். இதபார்த்தா சிம்பு பிரியாணி ஊட்டியே திரிஷாவை வளர்த்திருக்கிறார். திரிஷா ஒரு நாள் அசைவம் சாப்பிட்டால் மூன்று நாட்கள் ட்ரெட் மில்லில் ஓடுவாராம். அந்த அளவுக்கு உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்பவர்.

இப்பொழுதும் கூட நடித்தால் ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று கர்வமாக கூறிவருகிறார். அதற்கு காரணம் அவர் இவ்வாறு உடல் எடையை பாதுகாத்து இன்று வரை ஸ்லிம்மாக உள்ளார்.

அதனால் தான் இன்று வரை ஒரு நிலையான இடத்தில் திரிஷா இருக்க முடிகிறது. மௌனம் பேசியதே படத்தில் பார்த்தது போல் 96 படம் வரை இளமையாக உள்ள த்ரிஷா தற்போது ராங்கி, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். திரிஷா ரசிகர்கள் தற்போது அவர் பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்