Tamil Cinema News | சினிமா செய்திகள்
கௌதம் மேனனை தலையில் தூக்கி வைத்து ஆடும் பிரபலம்.. அவர் இல்லனா படம் பிளாப்
நடிகர் துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்துள்ள காதல், ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” வரும் பிப்ரவரி 28 அன்று வெளியாக உள்ளது. இப்படத்தை Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து தயாரித்துள்ளன. புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், துல்கர் சல்மான் பேசுகையில், இந்தப்படத்தின் விளம்பரத்தை ஆரம்பித்தபோது எல்லோரும் என்னிடம் “ஏன் இந்த இடைவெளி” என கேட்டது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
என்னை மறக்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தக்கதை கேட்டவுடனே மிக உற்சாகமாக இருந்துச்சு. எப்போது இந்தப்படம் செய்யலாம் எனக் காத்திருந்தேன். நான் முதலில் பயந்திருந்தேன். படக்குழு புதிது எப்படி இருக்கும் என நினத்தேன்.
என் மீது எல்லோரும் அன்பாக இருந்தார்கள். ரிது வர்மாவின் பெல்லி சூப்புலு பார்த்துள்ளேன் அவர் மிகத்திறமை வாய்ந்தவர். அவர் ஒரு தமிழ்பெண் போலவே இப்படத்தில் தெரிவார். படப்பிப்பிடிப்பில் பெரும் ஒத்துழைப்பு தந்தார்.

salman
கௌதம் சார் தான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம். அவர் இல்லாவிட்டால் இந்தப்படம் காமெடியாக இருந்திருக்கும். இந்தப்படத்தின் சூப்பர்ஸ்டார் அவர் தான். அவர் விசிறியாக படப்பிடிப்பில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம்.
அவருடன் கண்டிப்பாக ஒரு காதல் படம் நடிப்பேன். இயக்குநர் தேசிங்கு பயங்கர தெளிவானவர், அவரது கனவு இந்தப்படம். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இந்தப்படம் கண்டிப்பாக இருக்கும். எல்லோரும் பாருங்கள் நன்றி என்றார்.
