Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செல்வராகவனுக்கு பிறகு பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

தான சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. தற்போது மேலும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

செல்வராகவன் படத்திற்கு பிறகு இயக்குனர் KV ஆனந்த் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இருவரும் அயன் என்னும் பிளாக்பஸ்டர் படத்தையும் மாற்றான் என்ற படத்தையும் கொடுத்தனர்.

அதன் பிறகு Kv ஆனந்த் கோ,அனேகன்,கவண் தொடர் வெற்றிய கொடுத்து தான் ஒரு வெற்றி இயக்குனர் என்பதை நிலைநாட்டினார். இவர்கள் இனையும் படத்தை AGS தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தற்போது சூர்யாவுக்கு சம்பளம் நிர்னைப்பதில் இழுபறி போய் கொண்டு இருக்கிறது. சுமுக ஏற்பாடு எட்டும்பட்சத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளிவர வாய்ப்புள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top