சினிமாவில் எல்லாரும் இப்படித்தான்.. அஜித் கூறியதை வெளிப்படையாக சொன்ன SA சந்திரசேகர்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக, வசூல் மன்னனாக ஏராளமான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். இவரின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் தமிழில் முன்னணி ஹீரோக்களை வைத்து ஏராளமான வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் நடிகர் அஜித்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது அஜித்தும், விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதேபோல் அஜித்தின் மனைவி ஷாலினியும் விஜய் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய பழக்கம் உடையவர்.

அந்த நட்பின் அடிப்படையில் அவர்கள் இரு குடும்பங்களும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் மாறி மாறி சென்று வருவது வழக்கம். அப்படித்தான் ஒருநாள் சந்திரசேகர், அஜித்தை பார்ப்பதற்கு அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவரை ஷாலினி வரவேற்று உபசரித்து உள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த அஜித், சந்திரசேகர் அருகில் அமர்ந்து கொண்டு சினிமா பற்றிய பல விஷயங்களை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருக்கிறார். அப்போது அஜித் சினிமாவில் நாணயமாணவர்கள் கிடையாது, யாரையும் இப்போது நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு சந்திரசேகர் சினிமாவில் நாணயமாணவர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆனால் இப்போது யாரும் கிடையாது அது ஒரு கோல்டன் பீரியட் காலம். இப்போது உங்கள் தலைமுறையில் அப்படி யாரும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

மேலும் அஜித் சொல்வதைக் கேட்கும் போது நேர்மையாக, உண்மையாக அஜித் இருப்பதுபோல் சினிமாவில் அனைவரும் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவது தெரிகிறது. இவ்வாறு அன்றைய சந்திப்பின் போது நடந்த நிகழ்வுகளை கூறிய சந்திரசேகர் அதன் பிறகு அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்