அஜித்தின் முன்னாள் காதலிக்காக ஒரு வருடம் காத்திருந்த இயக்குனர்.. என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் காதலை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வெளி வந்துள்ளது. அதில் வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்டை ஏற்படுத்திய திரைப்படம் இதயம். இந்த திரைப்படத்தில் நடிகர் முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வெள்ளி விழா கொண்டாடிய இந்த திரைப்படம் நடிகர் முரளிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவருக்கு மட்டுமல்லாமல் படத்தின் நாயகியாக அறிமுகமான நடிகை ஹீராவுக்கும் ஏராளமான புகழைப் பெற்றுத் தந்தது.

இந்த திரைப்படத்தில் ஹீரா நடிக்க வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை தான். அதாவது ஹீரா சென்னையில் தன் கல்லூரிப் படிப்பை முடித்த சமயத்தில் மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் ஒரு ஆர்பனேஜ் ஸ்கூலில் வேலை செய்து வந்தார்.

அந்த சமயத்தில் இயக்குனர் கதிர், ஹீராவின் புகைப்படத்தை பார்த்து அவரை தன்னுடைய இதையும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்தார். அதனால் அமெரிக்காவில் இருந்த ஹீராவை தொடர்பு கொண்டு அதைப் பற்றி பேசியுள்ளார்.

ஆனால் ஹீரோவுக்கு நடிப்பதில் விருப்பம் இல்லாத காரணத்தால் இந்த பட வாய்ப்பை அவர் மறுத்துள்ளார். ஆனாலும் எப்படியாவது இந்த படத்தில் அவரை நடிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்த இயக்குனர் ஹீரோவுக்காக ஒரு வருடம் வரை காத்திருந்துள்ளார்.

அந்த ஒரு வருடமும் இயக்குனர் ஹீராவை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு பெரும் முயற்சி செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக ஹீரா இதயம் திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விருப்பம் இல்லாமல் அவர் நடித்த அந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அந்தத் திரைப்படத்தில் அவரை பார்த்து பிடித்து போன இயக்குனர் மணிரத்னம் அவருடைய திருடா திருடா திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்த ஹீரா கடைசியாக சுயம்வரம் என்ற திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்