ஆர்யாவுக்கு இருக்கிற சாமர்த்தியம் இயக்குனர் பாலாவுக்கு இல்ல.. 3 வருட இழுபறிக்கு பின் இன்று தீர்ப்பு

கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் விஷால், ஆர்யா ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் தான் அவன் இவன். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த சூழலில்தான் அவன் இவன் திரைப்படம் சர்ச்சைக்குரிய சிக்கலில் சிக்கித் தவித்தது. ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்ட சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்த அவதூறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டது.

சிங்கம்பட்டி ஜமீன் டி என் எஸ் தீர்த்தபதி மகன் இளைய ஜமீன் சங்கராத் மஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பாலா மற்றும் ஆர்யா இருவருக்கும் தனித்தனி வழக்காக பிரிக்கப்பட்டு அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா மற்றும் சிங்கம்பட்டி வாரிசு சங்கராத் மஜனிடம் வருத்தம் தெரிவித்ததால், ஆர்யாவின் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. எனவே ஆர்யாவின் இந்த சாமர்த்தியம் இயக்குனர் பாலாவுக்கு இல்லை.

avan ivan
avan ivan

அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்த நிலையில், இன்று இயக்குனர் பாலாவின் வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், அவன் இவன் திரைப்பட அவதூறு வழக்கிலிருந்து இயக்குனர் பாலாவை விடுவிப்பதாக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஆனால் இந்தத் தீர்ப்பில் சிறிதும் உடன்படாத சிங்கம்பட்டி ஜமீன் டி என் எஸ் தீர்த்தபதி மகன் இளைய ஜமீன் சங்கராத் மஜன், இந்த வழக்கு குறித்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்