நிஜ ரூபம் வெளியில வந்துருச்சு.. பணத்திற்காக ரசிகர்களை முட்டாள் ஆக்கும் தில் ராஜ்

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தில் ராஜுவின் முகம் தான் எங்கு பார்த்தாலும் சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் ஏதாவது ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட தமிழ் சினிமாவில் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். அதனால் அஜித்தின் துணிவை காட்டிலும் விஜயின் வாரிசு படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும்.

Also Read: உங்க பங்ஷனால் போலீசுக்கு தான் தலைவலி.. ரசிகர்கள் செய்த வேலையால் தில் ராஜிக்கு வந்த நெருக்கடி

இப்பொழுது ஆந்திராவில் துணிவு படத்தை விசாகப்பட்டினம் மற்றும் 2, 3 ஏரியாக்களில் தில் ராஜுவே வெளியிடுகிறார். ஆந்திராவில் பயங்கர செல்வாக்குடன் இருக்கும் தில் ராஜு, விஜயின் வாரிசு படத்தை தயாரித்தால் அவருக்குத்தான் முன்னிலை கொடுக்க வேண்டும் என ரசிகர்களிடமும் சல சலப்பை எழுப்பி விட்டு இப்போது இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறார்.

ஆகையால் ஆந்திராவில் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் தில் ராஜு அவருடைய வாரிசு படத்தை ப்ரொமோட் செய்ய இவ்வளவு நாள் பல வேலைகளை பார்த்ததுடன் கடைசியில் நேரத்தில் அஜித்தின் துணிவு படத்தையும் ரிலீஸ் செய்யும் உரிமையையும் பெற்றுவிட்டார்.

Also Read: தில் ராஜூ உடன் இணையும் 100 கோடி வசூல் நடிகர்.. வாரிசு விஜய்க்கு பின் போட்ட அடுத்த ஸ்கெட்ச்

மேலும் விஜய் படத்தை தயாரித்த தில் ராஜு அஜித் படம் ஓடாது வசூல் பண்ணாதே என்று கூறி தற்போது ஆந்திராவில் வெளியிடுவது ரசிகர்களை முட்டாள் ஆக்குவது போல் இருக்கிறது. இதேபோல் உதயநிதி வாரிசு படத்தை வெளியிட மாட்டேன் என்று கூறியதாகவும் கூறினார்.

ஆகையால் ஆந்திராவில் மட்டுமல்ல தற்போது தமிழ் நாட்டில் முக்கியமான 5 இடங்களில் தில் ராஜு துணிவு படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறார். இவர்கள் அனைவரும் ரசிகர்களை குறிவைத்து அவர்களை முட்டாளாக்கி பணம் சம்பாதிப்பது மட்டுமே இதில் தெரிகிறது. இதில் ரசிகர்கள் சண்டை இல்லாமல் இருந்தால் நல்லது.

Also Read: தில் ராஜுவால் விஜய்க்கு வந்த பேராபத்து.. ஊம கோட்டானாக இருந்து ஸ்கோர் செய்த அஜித்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்