துருவ் விக்ரம் படத்தை கிடப்பில் போட்ட மாரி செல்வராஜ்.. எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்!

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களை இயக்கி தற்போது நம்பிக்கை மிக்க இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் எடுக்க இருந்தார்.

பா ரஞ்சித் தயாரிக்கும் அந்த படம் ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகும் இருந்தது. அதற்கான முதற்கட்ட பணிகள்கூட விறுவிறுப்பாக நடந்ததாக கூறினர்.

dhruv-vikram-mari-selvaraj-01
dhruv-vikram-mari-selvaraj-01

ஆனால் தற்போது பா ரஞ்சித் கைவசம் நிறைய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருவதால் உடனடியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உஷாரான மாரி செல்வராஜ், கர்ணன் படத்தை தொடர்ந்து மீண்டும் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என தான் சொன்னதை நினைவு படுத்தி அவரிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கி விட்டாராம்.

dhanush-mari-selvaraj-cinemapettai
dhanush-mari-selvaraj-cinemapettai

அடுத்ததாக மாரி செல்வராஜ், தனுஷ் கூட்டணியில் தான் படம் வெளியாகும் எனவும் கூறுகின்றனர். அந்த படத்தை முடித்த பிறகுதான் துருவ் விக்ரம் படம் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாரி செல்வராஜ் படங்கள் குறுகிய கால தயாரிப்பாக இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இருந்தாலும் தனுஷ் முடிவைப் பொறுத்தது தான் மாரி செல்வராஜ் துருவ்விக்ரம் படத்தின் முடிவு இருக்கிறதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்