1.5 லட்சம் கொடுத்து வெளிநாட்டு வகை நாய் குட்டிகளை வாங்கிய தனுஷ்.. கண்ணுக்கு தான் காசு!

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் என்பவர் இயக்கி வருகிறார்.

மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை விட இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நடிகைகள் நடிக்கின்றனர்.

மேலும் பிரகாஷ் ராஜ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் மற்றும் பெரிய இயக்குநர்கள் படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினர் அதிர்ச்சியாக்கி வருகிறது.

பிரபலங்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரும்பாலும் நடிகைகள் தான் இந்த விஷயத்தில் அதிக கவனம் எடுத்து செல்லப்பிராணிகளை அதிகமாகி வளர்ப்பார்கள். இப்போது பிசியான நடிகராக இருக்கும் தனுஷுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது போல.

உலகிலேயே உயரிய வகை நாய் குட்டியான ஒயிட் சைபீரியன் ஹஸ்கி என்ற வகையைச் சேர்ந்த இரண்டு குட்டிகளை லட்சக்கணக்கில் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த இரண்டையும் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தனுஷ். நீலநிறக் கண்களை உடைய அந்த நாய் குட்டிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

dhanush-with-his-pets
dhanush-with-his-pets
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்