கர்ணன் பட கிளைமாக்ஸை மாற்றிய தனுஷ்.. முதலில் வைக்கப்பட்ட கிளைமாக்ஸ் இதுதான்!

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கர்ணன் படம் வெளியான மூன்றாவது நாளே தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் மிகப்பெரிய வசூல் செய்ய வேண்டிய கர்ணன் திரைப்படம் அதிலிருந்து கொஞ்சம் குறைவாகவே வசூல் செய்தது. அதையும் அடுத்த சில நாட்களிலேயே அமேசான் தளத்திற்கு கொடுத்து சரிகட்டி விட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி.

தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான கர்ணன் படத்திற்கு முதன் முதலில் வைக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியை தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் இணைந்து மாற்றி விட்டதாக தாணுவே சமீபத்திய ஒரு நாளிதழ் பேட்டியில் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

ஊருக்காக உழைக்கும் கர்ணன் தனுஷ் கடைசியில் படத்தில் இறந்து விடுவது போன்ற காட்சி தான் முதலில் கிளைமாக்ஸாக இருந்ததாம். ஆனால் தனுஷிடம் கதை சொல்லும்போதே இந்த கதைக்கு ஹீரோ இறந்தால் சரியாக இருக்காது என எடுத்துக்கூறி அறிவுறுத்தினாராம்.

அதைப்போல் தாணுவும் முழு கதையை கேட்டுவிட்டு கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ இறந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், முழுக்க முழுக்க ஊருக்காக வாழ்ந்த இளைஞர் கடைசியில் ஊருடன் வந்து சேர்ந்தால்தானே அந்த படத்திற்கு உயிர் இருக்கும் எனவும் கூறி அறிவுறுத்தினார்களாம்.

அதன் பிறகுதான் மாரிசெல்வராஜ் கர்ணன் படத்தின் கிளைமாக்ஸை மாற்றி தனுஷ் சிறையில் இருந்து வந்த பின்னர் மக்கள் அவரை கொண்டாடுவது போல காட்சிகளை எடுத்து முடித்தாராம்.

karnan-cinemapettai
karnan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்