நானே வருவேன் படப்பிடிப்பு எப்போது.? போஸ்டர் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்

தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு, தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்க உள்ள இந்த படத்திற்கு தனுஷுக்கு இரண்டு மடங்கு சம்பளம் கொடுப்பதாகவும் பேசப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே செல்வராகவனிடம் கமிட்டாகி இருந்த படங்கள் என்னவாகும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நானே வருவேன் படம் எப்போது தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்டு 20-ம் தேதி நானே வருவேன் படம் படப்பிடிப்பு தொடங்கும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதனால் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் தற்போது உறுதியாகி உள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு டோலிவுட்டில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குப் பின் வெற்றிமாறன், மாரிசெல்வராஜ் மற்றும் மீண்டும் செல்வராகவனுடன் புதுப்பேட்டை-2 என்று அடுக்கடுக்காக பிஸியாக உள்ளார் தனுஷ். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இருப்பதால் ஜகமே தந்திரம் தோல்வி அவருக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

ஆனாலும் இது போன்ற படங்களில் இனிமேல் நடிப்பதற்கு தனுஷ் ஒத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. எப்படி பேட்ட படம் வசூல் ரீதியாக அடி வாங்கியது. அதேபோல் ஜகமே தந்திரம் விமர்சன ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

dhanushp-naney-varuven
dhanushp-naney-varuven
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்