உன் வாழ்வையும் சாவையும் நாங்க தான் முடிவு செய்யனும்.. தனுசை மிரட்டும் ரஜினியின் வட்டாரம்!

தனுஷ் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை என்று வெளியிட்டாரோ அன்றிலிருந்தே பல சர்ச்சைகளும், பிரச்சினைகளும் அவரை பூதாகரமாக சுற்றி வருகிறது. சூப்பர் ஸ்டாரின் மகளை அவர் எப்படி வேண்டாம் என்று சொல்லலாம் என்று ரஜினியின் ரசிகர்கள் ஒரு பக்கம் கொந்தளித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கமிருக்க ரஜினி குடும்பத்திலிருந்து தனுஷுக்கு தொழில் ரீதியாக சில பிரச்சினைகள் வருவதாக தற்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரஜினிகாந்தும், பிரபல தயாரிப்பாளரும் அன்றைய காலம் முதலே நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.

இந்தப் பழக்கத்தின் காரணமாக சினிமா முதல் குடும்ப பிரச்சினைகள் வரை அவர்கள் அனைத்தையும் மிகவும் எதார்த்தமாக பேசிக்கொள்வார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் அந்த தயாரிப்பாளர் தன்னுடைய மகளின் திருமண விழாவிற்கு அழைப்பிதழ் வைக்க ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு ரஜினியை சந்தித்து பேசிய அந்த தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் விவகாரத்து விஷயத்தைப் பற்றியும் விசாரித்துள்ளார். மேலும் தனுஷ் என்ன ஹாலிவுட், பாலிவுட் சென்றால் பெரிய ஆளா எப்படி இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு வந்து தான் ஆக வேண்டும்.

எனக்கு நிறைய தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். அதனால் இனிமேல் தனுஷ் படத்தை யாரும் வெளியிட முடியாத படியும், இனி அவருக்கு எந்த புது படமும் கிடைக்காத படியும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ரஜினியிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்தாரா என்பது பற்றி தெரியவில்லை. இந்த செய்தியை சினிமா பிரபலம் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் விவாகரத்து செய்வதாக மட்டும் தான் கூறினார். ஆனால் நிரந்தரமாக பிரிய அவர் தற்போது வரை விரும்பவில்லை. அதோடு தனுஷ் குடும்பத்தினருக்கும் இந்த விவாகரத்து முடிவில் அவ்வளவாக பிடித்தம் இல்லை. இதனால் தனுஷ் யோசிப்பதற்கு சிறிது கால இடைவெளி வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

இதை வைத்து பார்க்கும் பொழுது தனுஷ் கூடிய விரைவில் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ்வார் என்று தெரிகிறது. ஆனால் ரஜினியின் குடும்பத்தினரோ அவருக்கான அந்த நேரத்தை கொடுக்காமல் உடனடியாக சேர வேண்டும் என்று அவரை வற்புறுத்தி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாகத்தான் அவர்கள் தனுஷிற்கு தொடர்ந்து அடுக்கடுக்கான பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் தனுஷ் விவாகரத்து முடிவை மாற்றி விடுவார் என்றும் அவர்கள் கணக்கிட்டு வருவதாகவும் தெரிகிறது. இப்போதைக்கு தனுஷின் இந்த விஷயம் தான் கோடம்பாக்கத்தில் முக்கிய பேச்சாக இருக்கிறது.

இதேபோன்றுதான் நடிகர் ராமராஜன் கூட தன் மனைவி நளினியை விவாகரத்து செய்தார். அதன் பிறகு அவர் சினிமா துறையை விட்டே காணாமல் போய்விட்டார். அப்படி ஒரு நிலை தனுஷிற்கு வந்துவிடக்கூடாது என்று அவரின் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்