காதலித்த நடிகையை நண்பனுக்கு விட்டுக்கொடுத்த தனுஷ்.. வாழ்க்கையை தொலைத்த பரிதாபம்

நடிகர் தனுஷ் அவர்கள் மேடைகளில் பேசும் பேச்சிற்கும், அவரது நிஜ வாழ்வில் நடந்து கொள்ளும் விதத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அளவிற்கு மேடையில் நல்ல பிள்ளையாக பேசும் தனுஷ் நிஜ வாழ்வில் பல சித்து விளையாட்டுகளை விளையாடி வருகிறார். அப்படி பல நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் தனுஷின் பெயர் அடிபடுகிறது.

இவர் படத்தில் நடிக்கும் நடிகைகளோடு திரையை தாண்டி தனிப்பட்ட முறையில் இவர் காட்டும் நெருக்கம் தான் இவரின் பெயரை சினிமா வட்டாரத்தில் கெடுத்து விடுகிறது. உடன் நடிக்கும் நடிகைகளை எல்லாம் காதல் வயப்பட வைத்து, நடிகர் சிம்புவையே ஓவர்டேக் செய்து போய்க் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். சிம்பு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால், வெளிப்படையாக தன்னுடைய காதலை பற்றி வெளியில் சொல்லி விடுகிறார்.

அவர் சொல்லாமல் அதுவாக கசிந்தாலும் அவர் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் தனுஷ் விரைவில் ஐஸ்வர்யாவோடு திருமண வாழ்விற்குள் சென்றுவிட்டதால் வெளிப்படையாக வெளியில் சொல்ல முடிவதில்லை. பிரபல நடிகை தனுஷை துரத்தி துரத்தி காதலித்ததாகவும் பின் மற்றொரு ஹீரோ காதலிப்பது தெரிந்தவுடன் விட்டுக் கொடுத்து விட்டாராம். இந்த செய்தியை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்படி இவர் நடித்த தங்கமகன் படத்தில் உடன் நடித்த சமந்தாவோடு இவருக்கு காதல் மலர்ந்திருக்கிறது. அதன்பிறகு இருவரும் ஒட்டி உறவாடி வெகுநாட்கள் பழகி வந்திருக்கின்றனர். ஆனால் நடிகை சமந்தா நாக சைதன்யாவைவயும் சைடில் காதல் செய்கிறார் என்பது தெரிந்தவுடன் ஜென்டில்மேனாக நடந்து கொண்ட தனுஷ் மெதுவாக சமந்தாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.

அதன் பிறகுதான் பூகம்பம் வெடித்தது. இருந்தும், நாக சைதன்யாவை ஒருவழியாக சமாளித்து சமந்தா திருமணம் செய்து கொண்டாராம். அந்த பூகம்பத்திற்கு காரணமான தனுசை பற்றியும் சமந்தா- தனுஷ் இருவரும் பழகியது பற்றியும் சமந்தாவின் மாமனார் நடிகர் நாகர்ஜுனாவிற்கு ஏற்கனவே தெரியுமாம். நாக சைதன்யா சமந்தா மீது கொண்ட காதலின் காரணமாக சமந்தாவை சைதன்யா திருமணம் செய்து கொள்ள நாகர்ஜுனா பின் சம்மதித்து இருக்கிறார்.

அதன் பிறகு, சமந்தாவுக்கும் சைதன்யாவும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர், இதே போல், சில நாட்கள் கழித்து தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்த இரண்டு விவாகரத்துக்கும் முடிச்சுப்போட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த இரண்டுக்கும் காரணம் தனுஷ் மற்றும் சமந்தா தான் என்று பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை சினிமாவில் இதுபோன்று நடக்கும் கிசுகிசுக்களை தைரியமாக சமூக வலைதளங்களில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்