பகிரங்கமாக காசு கேட்டு மிரட்டும் மனைவி.. பேட்டியில் உண்மையை சொல்லி அழுத தாடி பாலாஜி

விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருக்கும் தாடி பாலாஜி தற்போது அவர் மனைவி நித்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பாகவே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

சாதாரண குடும்ப பிரச்சனையாக இருந்த அவர்களின் பஞ்சாயத்து இறுதியில் போலீஸ் கேஸ், மீடியா என்று பரவியது. தன் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக தாடி பாலாஜியின் மனைவி மீடியாக்களில் அடுத்தடுத்து பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார்.

மேலும் இனி அவருடன் வாழ முடியாது என்று தன் குழந்தையை அழைத்துக் கொண்டு அவர் கணவரை விட்டு தற்போது தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருவரும் பிரிய முடிவு செய்தபோது தாடி பாலாஜி தன் மனைவிக்கு ஜீவனாம்சம் வேண்டுமா என்று கேட்டுள்ளார்.

ஆனால் அவரின் மனைவி எனக்கு எந்த பணமும் தேவை இல்லை என்று கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர்கள் இருவரும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று நினைத்த வேளையில் பிரச்சனை மேலும் அதிகரித்தது.

அதுமட்டுமல்லாமல் நித்யா தாடி பாலாஜியிடம் தனக்கு இருபது லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். முதலில் வேண்டாம் என்று கூறிவிட்டு இப்போது அவர் பணம் கேட்டது இருவருக்குள்ளும் மேலும் ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டது.

அதோடு நித்யா தன் குழந்தை போஷிகாவை சோஷியல் மீடியாவில் தாடி பாலாஜி குறித்து தவறாக பேச வைப்பது, வீடியோ வெளியிடுவேன் என எச்சரிக்கை கொடுப்பது, நடனமாட செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

உங்களுக்குள் என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கட்டும் அதை குழந்தையின் மனதில் விதைக்காதீர்கள் என்று நித்யாவிற்கு பலரும் அறிவுரை செய்தனர். இது தாடி பாலாஜியின் கவனத்திற்கும் சென்றது. மேலும் போஷிகாவின் பள்ளி நிர்வாகமும் அவரிடம் உங்கள் குழந்தை சோசியல் மீடியாவில் இதுபோன்று பேசுவது சக மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.

இதனால் பயந்துபோன தாடி பாலாஜி தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து தற்போது அவர் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர்களின் இவ்வளவு பிரச்சினையிலும் தாடி பாலாஜி பல நேரங்களில் அமைதியாகவே இருக்கிறார்.

ஆனால் அவரின் மனைவி நித்யா தன்னிடம் எல்லாவற்றுக்கும் ஆதாரங்கள் இருக்கிறது அதை வெளியே விட்டு விடுவேன் என்று குழந்தையை வைத்துக்கொண்டு பகிரங்கமாகவே அவரை மிரட்டுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ நீங்க எல்லாத்தையும் ப்ளான் பண்ணிதான் செய்றீங்களா என்று அவருக்கு எதிராக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்