ரெண்டே நாளில் நொறுங்கிப் போய் விட்டேன்.. நெட்டிசன்களை விளாசிய குக் வித் கோமாளி பிரபலம்!

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்கின்ற சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சி தனி இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், மூன்றாவது சீசன் தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் பங்கேற்று போட்டியாளர்களை சிறப்பாக வழி நடத்துகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடுவர் வெங்கடேஷ் பட் கூறிய விஷயம் ஒன்று பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து, மன அழுத்தம் குறைந்து திருமணமாகி 8 வருடங்களாக குழந்தை பிறக்காத ஒரு பெண் தற்போது குழந்தை பெற்றிருப்பதாக கூறினார். இந்த சம்பவத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களைப் போட்டு தரக்குறைவாக வெங்கடேஷ் பட் அவர்களை சித்தரித்து பேசி வருவதால் இரண்டு நாட்களாக நொறுங்கிப் போய் விட்டதாக தற்போது சமூக வலைதளங்களில் உருக்கமான தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறைகள் தற்போது மன அழுத்தம் ஏற்படும் குழந்தையின்மை காரணமாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை எல்லாம் மேற்கொள்கின்றனர். அப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் சிலருக்கு குழந்தை பெறுவது அரிது தான். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தம் குறைந்து குழந்தை பெற்றதை பெரிய பாக்கியமாக பார்க்கிறேன்.

இது குழந்தை பெற்றிருக்கும் பாக்கியவான்களுக்கு மட்டுமே புரியும். ஆனால் இதை வைத்து கிண்டல் செய்வதெல்லாம் பார்த்தால் மனித நேயம் செத்து விட்டதா என்றெல்லாம் தோன்றுகிறது. மனிதம் சாகக்கூடாது. கடவுள் இருக்கிறார். இவ்வுலகில் இன்னும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு நல்ல எண்ணத்தில் மட்டுமே நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயத்தை வைத்து, இப்படிப்பட்ட தரக்குறைவான மீம்ஸ்களை உருவாக்கி உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பட் நெட்டிசன்களை விளாசுகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்