ஆர்த்தி புருஷன் செய்த விபரீத செயல்.. தலைமறைவான சம்பவம்

தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர், நடிகைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு பார்ட்டிகளில் கலந்துகொண்டு மது அருந்துவதை பழக்கமாக வைத்துள்ளார்கள். அவ்வாறு மது அருந்திவிட்டு சாலையில் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது.

இதில் பல நடிகர், நடிகைகள் சிக்கியுள்ளனர். தற்போது அந்த லிஸ்டில் நகைச்சுவை நடிகர் கணேஷ்கரும் சேர்ந்துள்ளார். கணேஷ்கர் படிக்காதவன், அரண்மனை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, மோகினி ஆகிய படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

கணேஷ்கர் பிரபல காமெடி நடிகை ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணேஷ்கர் மற்றும் ஆர்த்தி இருவரும் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்றாக இணைந்து பங்கேற்பார்கள்.

இந்நிலையில் கணேஷ்கர் சனிக்கிழமை இரவு பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பின்னாலிருந்து வந்த நபர் காயமடைந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கணேஷ்கர் அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடிவிட்டார். அன்று சனிக்கிழமை என்பதால் பார்ட்டியில் குடித்து விட்டு விபத்து ஏற்படுத்தி இருப்பார் என பலரும் விமர்சித்து வருகிறார்கள். குடிக்கவில்லை என்றால் அந்த இடத்தைவிட்டு தப்பித்து ஓடுவதற்கு அவசியமில்லை.

இப்பொழுது போலீஸ் அவர் மீது வழக்கை போட்டு தேடி வருகின்றனர். போலீசார் கணேஷ்கர் வீட்டுக்கு சென்று விசாரிக்கும்போது கணேஷ்கர் இங்கு வரவே இல்லை என ஆர்த்தி கூறியுள்ளார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்துச் சென்ற கணேஷ்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்