அட்ஜஸ்ட் பண்ண சொல்லி அம்மாவிடம் கேட்டார்கள்.. கண்ணீர் விட்ட பிரபல நடிகை

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல நடிகைகளும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என இயக்குனர்கள் சொல்லும் எந்த கதாபாத்திரம் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு நடித்து விடுவார்கள். அதற்கு காரணம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான்.

ஆனால் காலப்போக்கில் அதனை அப்படியே உல்டாவாக பேச ஆரம்பித்துவிடுவார்கள் முதலில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பரவாயில்லை என சொன்ன நடிகைகள் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் எங்களை அப்படி சொன்னார் என்று இப்படி சொன்னார் என அவர்கள் மேல் குறை கூறி விடுவார்கள்.

இது காலம் காலமாக நடந்து வந்தாலும் உண்மையை புரியாத சிலர் நடிகைகள் சொல்லும் விஷயங்களை நம்பி ஏமாந்து விட இது வழக்கம்தான் ஆனால் உண்மையாக பேசக்கூடிய நடிகைகளும் உள்ளனர் என்பதை உணர வேண்டும்

kalyani
kalyani

பிரபுதேவா லைலா நடிப்பில் 2001ல் வெளிவந்த படம் “அள்ளி தந்த வானம்”. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி.

ஜெயம், ரமணா உட்பட பல்வேறு வெற்றிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கல்யாணி கதாநாயகியாகும் கனவு கைகூடவே இல்லை. இப்போது ஆண்டாள் அழகர் உட்பட சின்னத்திரை நடிகையாக பிரபலமான கல்யாணி கதாநாயகியாக நடிக்க இயலாமல் போனது குறித்து மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் குழந்தை நட்சத்திரம் போல அவ்வளவு எளிதல்ல சினிமாவில் கதாநாயகியாக இருப்பது என்றும் தயாரிப்பாளர் இயக்குனர் உட்பட உயர்மட்டத்தில் இருக்கும் பலரிடத்திலும் அட்ஜஸ்மெண்ட்டில் இருக்க வேண்டும் என கல்யாணியின் அம்மாவிடமே கல்யாணியை அட்ஜஸ்ட் பன்ன சொல்லி இருக்கிறார்களாம்.

இதுபோன்ற விடயங்கள் தான் சினிமாத்துறையில் வழக்கமாக நடைபெறுவதாகவும். அதனை தொடர்ந்தால் வாய்ப்புகள் தொடரும் என்றும் கூறினாராம் அந்த நபர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்