சின்னி ஜெயந்த் மகனுக்கு கிடைத்த உயர்ந்த பதவி.. இதைவிட ஒரு அப்பாக்கு என்ன சந்தோஷம் வேனும்!

தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90 காலகட்டங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சின்னி ஜெயந்த். காமெடி மட்டுமல்லாமல் ஹீரோவுக்கு நிகரான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சின்னி ஜெயந்த் தற்போது சினிமாவை விட்டு விலகி உள்ளார்.

தற்போது சின்னி ஜெயந்த் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவர் மகன் செய்த சாதனையால் மீண்டும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருபதன் ஜெய், யு.பி.எஸ்.சி தேர்வில் கடந்த ஆண்டு அகிய இந்திய அளவில் 75வது இடத்தை பிடித்தார்.

அந்த சமயத்தில் இச்சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் சின்னி ஜெயந்திற்கும், அவர் மகனுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

chinni jayanth
chinni jayanth

முன்னதாக தன் மகன்களுக்கு படிப்பின் மீதே அதீத ஆர்வம் என்றும், நடிப்பில் ஆர்வம் இருந்திருந்தால் கட்டாயம் திரைத்துறைக்குள் வந்திருப்பார்கள் எனவும் சின்னி ஜெயந்தி கூறியதற்கான அர்த்தம் அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது.

ஐஏஎஸ் தேர்வில் தேர்வான ஸ்ருபதன் ஜெய் தற்போது தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ் திரையுலகில் இருந்து முதன் முறையாக ஒரு காமெடி நடிகரின் மகன் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்