Tamil Cinema News | சினிமா செய்திகள்
செக்க சிவந்த வானம் படத்தில் கலந்து கொண்ட கண்ணழகி… அடுத்தக்கட்ட க்யூட் அப்டேட்
மெகா ஸ்டார் பட்ஜெட்டில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டு இருக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் லைகா ப்ரோடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் செக்க சிவந்த வானம். தமிழ் சினிமாவின் புது முயற்சியாக பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். ஒரு நடிகர் என்றாலே சர்ச்சை ஏற்படும் சூழலில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிலம்பரசன், அருண் விஜய் உள்ளிட்ட நடிகர்களும், அதிதி ராவ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நாயகிகளும் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த மாதமே தொடங்கப்படுவதாக இருந்த படப்பிடிப்பு தயாரிப்பாளர் சங்க போராட்டத்தால் தள்ளிப்போனது. தற்போது தொடங்கப்பட்டு இருக்கும் இப்படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய பிரச்சனையை படக்குழு பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அரவிந்த் சாமியின் ஜோடியாக ஜோதிகா நடிக்க இருக்கும் தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
படப்பிடிப்பில் சிம்புவின் காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் சரியாக வரமாட்டார் என குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், முதல் ஆளாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. அவரை தொடர்ந்து, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி ஆகியோர் காட்சிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில், ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பும் முடிவடைந்து இருப்பதாக அவரே டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இதை தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு துபாயில் இரண்டாம் கட்டமாக தொடங்கி இருக்கிறது. இதில், நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கலந்து கொண்டு இருக்கிறார். ஜோதிகாவை போல சிம்புவின் அடுத்தடுத்த காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்தே இப்படப்பிடிப்பு புகைப்படங்கள் கருப்பு, வெள்ளையில் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படம் சமகால சமூக பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கட்ட படப்பிடிப்புடன் படத்தின் முக்கிய காட்சிகள் வெளிவரும் என படக்குழு தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
