Jigarthanda DoubleX

சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

Jigarthanda DoubleX – Trailer: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்  ஆன படம் தான் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இந்த படம் 1975ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.  எஸ்ஜே சூர்யா லாரன்ஸை வைத்து படம் எடுக்கிறார்.

அந்த படம் எப்படி உருவாகிறது, இந்த படம் எடுக்கும் போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை ஆக்சன், காமெடி கலந்து காட்டப்படுகிறது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில்  ரவுடியான பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் ஒரு படம் எடுத்தார்.

Also read: சில்லுனு, ஜிகர்தண்டா பார்ட் 2 ரெடி.. ஆனா, சேதுவாக நடிக்க போவது பாபி சிம்ஹா இல்லயாம்

அதேபோன்றுதான் இரண்டாம் பாகத்தில் முரட்டு ரவுடியாக இருக்கும் லாரன்ஸை வைத்து எஸ்ஜே சூர்யா படம் எடுப்பது போல் திரை கதையை அமைத்திருக்கின்றனர். ட்ரெய்லரில் லாரன்ஸ் சொல்லும் டயலாக் அல்டிமேட் ஆக இருக்கிறது.

‘கருப்பா இருந்தா கேவலமா’, ‘தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ’, ‘நல்லவங்கள பத்தி படம் எடுத்தால் யாரும் பார்க்கிறதில்லை’ , ‘சுயசரிதையை கொஞ்சம் மாத்தி எழுதிரலாமா?’, ‘இங்கு எவனும் எதையும் புதுசா எழுதிட முடியாது. பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சு கிட்டா போதும் எழுதப்பட்டது எழுதப்படும்’ என இந்த ட்ரெய்லரில் இடம் பெறும் டயலாக் எல்லாம்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும் என்று  ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

ஜிகர்தண்டா டபுள்X ட்ரைலர் இதோ!

Also read: கெத்து காட்டும் ராகவா லாரன்ஸ்.. தோல்வி இயக்குனரை தூக்கி விடுவதற்காக எடுக்கப்போகும் ரிஸ்க்

conjuring-kannappan-trailer-IMAGE

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

Also read: வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரைலர் இதோ!

Also read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

bb7-kamal-promo

கதவு மூடாம பாத்ரூம் போறான், கெட்ட வார்த்தையில் அசிங்கமா பேசுறான்.. இன்று ஆண்டவர் கொடுக்க போகும் சாட்டையடி

Bigg Boss Tamil Season 7 | 4th November 2023 – Promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக ஒளிபரப்பாகிறது. அதிலும் வீகென்ட் எபிசோடுகளில் பிக் பாஸ் போட்டியாளர்களை ஆண்டவர் வெளுத்து வாங்குவதால் அன்றைய நிகழ்ச்சிகள் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ஆகவே மாறிவிட்டது.

அதிலும் இந்த சீசனில் இதுவரை வந்ததில் மாஸான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கும் இந்த ப்ரோமோ தான். இந்த சீசனின் வெற்றியாளர் இவர்தான் என பலரும் யூகித்த பிரதீப்பின் ஆட்டம் தாங்காமல் மொத்த பிக் பாஸ் வீடே கொந்தளித்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு எதிராக முழு பிக் பாஸ் வீடே செங்கொடியை உயர்த்தி இருக்கிறது.

கடந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் பிரதீப்பின் அழுச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சமல்ல. ‘கெட்ட வார்த்தைகளை கோபத்தில் பேசினால் கூட பரவாயில்லை, தவறான நோக்கத்தில் பேசியது ரொம்பவே தப்பா இருக்குது’ என்று ஜோவிகா பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் பேண்டை கையில் போட்டுக்கொண்டு கமலிடம் நியாயம் கேட்டார்.

இவரைத் தொடர்ந்து விஷ பாட்டில் பூர்ணிமா, ‘பிரதீப்பால் இந்த வீட்டில் தூங்கவே பயமா இருக்குது’ என்றும் நிக்சன், ‘பிரதீப் பேசுவதை தவறு என்று கூட ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறார். நான் பேசுவது தப்பெல்லாம் கிடையாது, இப்படி தான் பேசுவேன் என்று திமிரு காட்டுகிறார்’ அவரைத்தொடர்ந்து ரவீனா, ‘ஒரு பெண் என்று கூட பார்க்காமல் என்னுடைய இடுப்பில் அணிந்திருந்த அரைஞாண் கயிறை குறித்து பிரதீப் அசிங்கமாக விமர்சிக்கிறார்’ என்றும் விஷ்ணு, ‘பிரதீப்பிடம் யாராவது ஏதாவது கேட்க நினைத்தால் அவர்களை அசிங்க அசிங்கமாக பேசி விடுவேன் என்று ஆப் செய்கிறார்’.

Also read: யாரு சாமி நீ, இப்படி ஒரு மூளையா.? கவினை அடித்தது ஏன், உண்மையை உடைத்த பிரதீப்

தொடர்ச்சியாக மணி, ‘இன்று கூட பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை அடைத்துக் கொள்ளாமல் திறந்து போட்டுக்கிட்டே டாய்லெட் போகிறார்’ என்று பிரதீப்பின் மீது ஹவுஸ் மேட்ஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆண்டவர், ‘இதற்கெல்லாம் என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என கோபத்துடன் பதில் அளித்தார்.

இன்னைக்கு பிரதீப்புக்கு சம்பவம் இருக்கு .சைக்கோ போல அவ்வப்போது நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டு சிரிக்கும் பிரதீப் கடந்த வாரம் கொஞ்சம் ஓவராகவே தான் ஆடினார். இதற்கெல்லாம் நிச்சயம் இன்று ஆண்டவர் சரியான சவுக்கடி கொடுக்கப் போகிறார். வன்முறையாக நடந்து கொண்டதற்காக விஜய் வர்மாவை ரெட் கார்ட் கொடுத்து எலிமினேட் செய்தது போல், பிரதீப்புக்கும் இன்று ரெட் கார்ட் கொடுக்கப் போகின்றனர்.

இன்று வெளியான மாஸான ப்ரோமோ!

Also read: டிஆர்பிக்காக பலியாடான போட்டியாளர்.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ் எலிமினேஷன்

bb7=promo

பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் இவர்தான்.. தலைகீழாக மாறப் போகும் ஸ்மால் பாஸ் வீடு

Bigg Boss Tamil Season 7 | 3rd November 2023 – Promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக விஷ பாட்டில் பூர்ணிமா தான் கேப்டன் ஆக இருந்து வருகிறார். அடுத்த வாரம் மூன்று பேர் கேப்டன்ஷிப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய கூல் சுரேஷ் மற்றும் மாயா இருவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா தேர்வானார். கூல் சுரேஷ், விசித்ரா, மாயா இவர்கள் மூன்று பேருக்கும் தான் அடுத்த வார தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது.

மேடையில் ஒரு காலை தூக்கிக் கொண்டு இன்னொரு காலில் மட்டுமே அதிக நேரம் யார் நிற்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த வார கேப்டன் ஆக முடியும். இந்த போட்டியில் விசித்ரா மிகக் குறைந்த நேரம் மட்டுமே ஒரு காலை தூக்கி கொண்டு நிற்க முடிந்தது. அவர் வெளியேறியதும் மாயா, கூல் சுரேஷ் இருவருக்கும் கடும் போட்டி நிகழ்ந்தது. ஆனால் கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் தடுமாறி காலை ஊன்றி விட்டார்.

Also Read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. புத்தம் புது சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்

கடைசியாக மாயா தான் வெற்றி பெற்று அடுத்த வாரம் கேப்டன் ஆனார். சும்மாவே மாயாவின் ஆட்டம் தாங்காது, இதுல அவர் அடுத்த வார கேப்டன் ஆகிவிட்டால் பிக் பாஸ் வீடே தலைகீழாக மாறிவிடும். அதிலும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் யார் போக வேண்டும் என்பதை கேப்டன் தான் முடிவெடுப்பார்.

தனக்கு யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் மாயா ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் பொறுக்கி போட போகிறார். குறிப்பாக ரவீனா- மணி இருவரும் காதல் பறவைகளாக பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கின்றனர். அவர்களை அடுத்த வாரம் வச்சு செய்யப் போகிறார். ஏனென்றால் மணியை மாயாவுக்கு சுத்தமாகவே பிடிக்காது, அந்த வெறுப்பை அவர் கேப்டன் ஆனதும் காட்டுவார்.

ஆனால் இந்த கேப்டன்ஷிப் போட்டிக்கு ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து விசித்ராவிற்கு பதில் தினேஷ் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்தான் அடுத்த வார தலைவராகி இருப்பார். தினேஷ் மட்டும் கேப்டன் ஆகி இருந்தால் பிக் பாஸ் சீசன் 7ல் இது வரை இல்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். கடந்த வாரம் திடீரென என்ட்ரி கொடுத்த 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள் தினேஷ் மட்டும் தனித்துவமாக விளையாடுகிறார். அவர் பைனல்ஸ் வரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த வார கேப்டன் யார் என்பதை உறுதிப்படுத்திய ப்ரோமோ!

Also Read: அக்கானு கூப்பிட்டு அசிங்கமா பேசுறான்.. பேட்டியில் ஆதங்கப்பட்ட பாரதிகண்ணம்மா

vichithra-bb7

விசித்ராவை வச்சு செய்த 5 போட்டியாளர்கள்.. கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்து வெளியேறிய சம்பவம்

Bigg Boss Tamil Season 7 Today Promo: இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ராவை 5 போட்டியாளர்கள் வச்சு செய்து விட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு போன அவர் வாயில் என்ன வார்த்தை வருகிறது என்று கூட தெரியாமல் சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார்.

அது மட்டுமல்ல ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி தன்னையே அறியாமலும் அழுதுவிட்டார். அந்த வீட்டில் எனக்கு பைத்தியமே பிடிக்குது என்றும் கதறுகிறார். இந்த வார கேப்டனான பூர்ணிமாவிடம் விசித்ரா ‘எதுக்குடி என்ன ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிச்சீங்க’ என்று சண்டைக்கு நிற்கிறார்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் கிளாமர் குயின் விசித்ராவை வச்சு செய்கின்றனர்.  பிக் பாஸ் வீட்டில் மூத்தவராக இருக்கும் விசித்ரா அப்போது மற்ற போட்டியாளர்களுக்கு அறிவுரை சொல்வார்.

Also read: அம்மா சென்டிமென்ட் எல்லாம் உங்களுக்கு மட்டும் தானா.. மோசமான ஸ்ட்ராடெஜியை பயன்படுத்தும் பிரதீப்

ஆனால் வைல்ட் கார்ட் என்ட்ரிகளாக உள்ளே வந்திருப்பவர்கள் யாருமே விசித்ராவை சுத்தமா மதிக்கவில்லை. அவர் சமையல் செய்யும்போது வேண்டிய உதவிகளை செய்யாமல் எனக்கென்னன்னு இருக்கிறார்கள்.  அதிலும் குறிப்பாக அர்ச்சனா விசித்ராவிடம் ஓவராக திமிரு காட்டுகிறார்.

இதனால் பொறுமையை இழந்த விசித்ரா விதிகளை மீறி ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவரை சமாதானப்படுத்தி எப்படியாவது மறுபடியும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முயற்சிக்கின்றனர். விசித்ரா விதிகளை மீறி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததால் கேஸ் கட் ஆகும்.

கேஸ் இல்லாம யாராலும் சமைக்க முடியாது, எல்லாரும் சாப்பிடாமல் மூடிக்கிட்டு இருங்க’ என்று கெட்ட வார்த்தைகளால் விசித்ரா அர்ச்சனை செய்கிறார். இந்த சம்பவத்தால் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போனார்கள். இன்றைய நிகழ்ச்சி விசித்ராவால் சூடு பிடித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைய ப்ரோமோ!

Also read: ஸ்மோக்கிங் ரூமில் ஒரே லிப் லாக் சத்தமா இருக்கு ஆண்டவரே.. என்னடா இது பிக்பாஸ் வீடா இல்ல அந்த மாதிரி இடமா?

bb7-house-cinemapettai

சில்ர பயலே, செருப்பால அடிப்பேன் நாயே.. பிக் பாஸில் நிஜ முகத்தை காட்டியதால் ரெடியாகும் ரெட் கார்டு

Bigg Boss Tamil Season 7 | 31st October 2023 – Promo 2 : மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்ட நாளில் இருந்தே காரசாரமாக ஒளிபரப்பாகிறது. அதிலும் டைட்டிலை அடித்து விட வேண்டும் என ஒவ்வொருவரும் விதவிதமான ஸ்டேடர்ஜியை பின்பற்றுகின்றனர். பிரதீப் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என அனைவரும் நினைத்தனர். ஆனால் இவர் விஜய் வர்மாவை விட மோசமாக நடந்து கொள்கிறார்.

இவருக்கு ஸ்ட்ரைக் கார்ட் எல்லாம் வேண்டாம், ஸ்ட்ரைட்டா ரெட் கார்டே கொடுக்க வேண்டும். ‘அசைஞ்சா போச்சு’ என்ற டாஸ்க் இன்று பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டது. பெல் கொண்ட பெல்ட்டை போட்டியாளர்கள் தலையில் அணிந்து கொண்டு அந்த பெல் ஃப்ரீஸ் ஆக வைப்பது தான் டாஸ்க். அப்போது பிரதீப் கூல் சுரேஷை பார்த்து ‘அவர் மணிய ஆட்டிக்கிட்டு மட்டும் இருக்க சொல்லுங்க’ என்று இரட்டை அர்த்தத்துடன் அசிங்கமாக பேசினார்.

இவ்வளவு நாள் கூலாக பிக் பாஸ் வீட்டில் இருந்த சுரேஷ் பிரதீப்பின் அவமான பேச்சால் பெட்டியை கட்டிக்கொண்டு கிளம்ப பார்த்தார். உடனே வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் அவரை அமைதிப்படுத்தி வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அதன் பின்பு பிரதீப் சொன்னது தப்புதான் என்று கூல் சுரேஷிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள்.

ஆனால் அப்போதும் பிரதீப், ‘நான் இப்படி தான் மரியாதை இல்லாமல் பேசுவேன். இது என்னோட ஸ்டேட்டர்ஜி’ என்று ஓவராக திமிருடன் பேசுகிறார். மக்கள் கொடுக்கிற சப்போட்டால் பிரதீப் நாளுக்கு நாள் ஓவராக ஆடுகிறார். மரியாதை இல்லாமல் பேசாதே’ என கூல் சுரேஷ் சொன்னதும், ‘சில்லறை பயலே! செருப்பு பிஞ்சிடும் நாயே’ என்று பிரதீப் எல்லை மீறிய வார்த்தைகளால் திட்டுகிறார்.

பிரதீப் பண்ணுவது கொஞ்சம் கூட சரியல்ல என ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அவருக்கு எதிராக திரும்புகின்றனர். பிரதீப்பின் உண்மையான முகத்திரை இப்போது கிழிந்து தொங்குகிறது. அதேசமயம் கூல் சுரேஷ் இப்போதுதான் தன்னுடைய ஆட்டத்தை ஆட துவங்கியிருக்கிறார்.

இனிமேல் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கப் போகிறது. மேலும் பிரதீப் பேசுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் அவர் யாருக்குமே மரியாதை கொடுக்காமல் படு கேவலமாக வார்த்தைகளை விடுகிறார். நிச்சயம் இந்த வாரம் பிரதீப்பிற்கு ஆண்டவர் ரெட் கார்ட் கொடுப்பது உறுதி.

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ!

BB7 (1)

ஒரு நாள் கூட தாங்க முடியாமல் கதறி அழும் வைல்டு கார்டு என்ட்ரி.. சிரிச்சு சிரிச்சு சாகடிக்கும் சூனியக்கிழவி

BB7 Tamil Promo: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7, 27 நாட்களை கடந்து இருக்கிறது. நேற்றைய எபிசோடில் ஒட்டுமொத்தமாக விஜே அர்ச்சனா, கானா பாலா, பிரவோ, தினேஷ், அன்ன பாரதி என ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். முந்தைய சீசன் போல் இல்லாமல், இந்த சீசனில் பழைய போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக புதிதாக வந்திருப்பவர்களை கார்னர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

அடிச்சிக்கிட்டாலும் நமக்குள்ள முடிச்சுக்கலாம் புதுசா யாரும் உள்ளே வர வேண்டாம் என பழைய போட்டியாளர்கள் முடிவெடுத்து விட்டார்கள். முதல் நாள் சம்பிரதாயத்துக்காகவாது நன்றாக பேசுவோம் என்று இல்லாமல் நேற்றில் இருந்தே பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் இந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஒட்டுமொத்த வைல்ட் கார்டு போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டின் பழைய போட்டியாளர்களை அழைத்து நேற்று வைல்டு கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்தவர்களை நாம் சரியாக வரவேற்கவில்லை என அர்ச்சனா சொல்கிறார் என்றார். அதற்கு மாயா அதெல்லாம் நீங்க எதிர்பார்க்காதீங்கனு நக்கலாக சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

உடனே அர்ச்சனா நீங்க கலாய்ப்பதற்க்கெல்லாம் நாங்க எல்லாம் அமைதியா போகணும்னு எதிர்பார்க்கிறீங்களா என கேக்க, மாயா நான் பேசியது அவமரியாதையா இருந்ததுனா மன்னிச்சுக்கோங்க என்று சொல்கிறார். வேண்டாதவங்களா இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்றது தான் மரியாதை என்று சொல்ல, அதற்கு மாயா உடன் சேர்ந்து பழைய போட்டியாளர்கள் எல்லோருமே சிரிக்கிறார்கள்.

அர்ச்சனா அதற்கு நீங்க செய்வது எதுவுமே சரி இல்லை என்று சொல்லி அழுகிறார். அவரை தினேஷ் சமாதானப்படுத்துவது போல் அந்த ப்ரோமோ முடிகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் நாளே அர்ச்சனா தாக்கு பிடிக்க முடியாமல் அழுதது பார்வையாளர்களே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதுவரை நடந்த சீசன்களில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்தவர்கள் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்தது இல்லை.

புதிதாக வந்த போட்டியாளர்களை கார்னர் செய்வது, அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி விசித்ரா மூலம் டார்ச்சர் செய்ய நினைப்பது, எல்லோரும் கூட்டாக சேர்ந்து கொண்டு புதிய போட்டியாளர்களை நாமினேட் செய்வது என பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் பழைய போட்டியாளர்கள் விதிகளை மீறிக் கொண்டே இருக்கிறார்கள். இது பார்வையாளர்களை எரிச்சல் அடைய செய்கிறது.

karthi-japan

சுறா எறா சுத்து போட்டாலும் சிக்குற திமிங்கலமா அது.? வைரலாகும் கார்த்தியின் ஜப்பான் ட்ரெய்லர்

கார்த்தியின் ஜப்பான் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

BB7

சாப்பாட்டுக்காக அடித்துக் கொள்ளும் பிக் பாஸ் வீடு.. செம்ம காண்டில் வெளியேறிய மாயா, கூல் சுரேஷ்

Bigg Boss season 7 Tamil: அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து இருக்கிறது. 26வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளரான மாயா மற்றும் கூல் சுரேஷ் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதுதான்.

எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த ஏழாவது சீசன் பெரிய போராட்டக் களமாகவே இருக்கிறது. ஒன்னுக்கு ரெண்டு வீடு என கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ். அது காட்டு தீயாக எரிந்து கொண்டு இருக்கிறது. கேப்டன் தன்னை அதிகம் கவராதவர்கள் என ஒரு ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது. இதனாலேயே வாரத்தின் முதல் நாளே சண்டை ஆரம்பம் ஆகி விடுகிறது.

பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்களில் பெரிய பாஸ் வீடு ஜெயிக்கிறதா அல்லது சின்ன பாஸ் வீடு ஜெயிக்கிறதா என்பதே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இன்று நடத்தப்பட்ட டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் வீடு ஜெயித்து விட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாருக்கும் உணவு இல்லை என பிக் பாஸ் அறிவித்துவிட்டார். இதனால் கூல் சுரேஷ் மற்றும் மாயா பயங்கர காண்டாகி விட்டார்கள்.

ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்த நிக்ஸனிடம் மாயா நாங்கள் உங்கள் வீட்டிற்கு வரலாமா என்று கேட்க, அவரும் ஓகே சொல்லிவிட்டார். உடனே மாயா மற்றும் கூல் சுரேஷ் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்று விட்டன.ர் இந்த வார கேப்டன் ஆக இருக்கும் பூர்ணிமா பனிஷ்மெண்டில் இருக்கும் நீங்கள் சாப்பாட்டிற்காக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்வது தப்பு என சொல்ல, மாயா மட்டும் பூர்ணிமாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது.

சண்டை வந்தது தான் சாக்கு என்று ரவீனா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பறந்துவிட்டார். அங்கே மணி இருப்பதால்தான் ரவீனா சென்றிருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான். இரண்டு நாட்களாக ரவீனா நன்றாக விளையாடுகிறார் என பார்வையாளர்கள் சொல்லி வந்த நேரத்தில் மீண்டும் பழைய குருடி கதவ தெரடி என்பது போல் சமயத்தை தனக்கு சாதகமாக வைத்து மணியிடம் சென்று விட்டார்.

ஏற்கனவே இந்த சீசனில் விளையாடும் போட்டியாளர்கள் ரொம்பவும் மந்தமாக இருக்கிறார்கள் என பார்வையாளர்களிடையே ஒரு கருத்து இருக்கிறது. மேலும் இந்த சீசனில் விளையாட வந்திருப்பவர்கள் யாருக்குமே டைட்டில் கார்டு வெல்லும் அளவுக்கு திறமை இல்லை என்றும் சொல்லி வருகின்றனர். இதுபோன்ற ஒரு சமயத்தில் இவர்கள் சாப்பாட்டிற்காக அடித்துக் கொள்வது பார்வையாளர்களை ரொம்பவும் வெறுப்படையச் செய்திருக்கிறது.

lokesh-rolex

லோகேஷ் யுனிவர்சில், ரோலக்சை விட கொடூரமான வில்லன் இவர்தான்.. லோகி வெர்ஷன் 2.0 வைரலாகும் வீடியோ

Lokesh in 2.0 Version: சினிமா ஆரம்பித்து எத்தனையோ வருடங்களை தாண்டிய நிலையில் ஏகப்பட்ட இயக்குனர்கள் பல பிரம்மாண்டமான படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் உள்ளே நுழைந்து நடிகர்களிடமும், மக்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குனர் யார் என்றால் அது லோகேஷ் தான். ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் சம்பந்தப்படுத்தி அதில் ஒரு ட்விஸ்ட்டை வைத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை கொடுப்பதில் மிகப்பெரிய கில்லாடி என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட இவர் இதுவரை இயக்கிய கைதி, விக்ரம் மற்றும் லியோ படங்களில் விட்ட குறை தொட்ட குறையாக பல காட்சிகளையும், நடிகர்களையும் புரியாத புதிராக கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கைதி படத்தில் உள்ள டில்லி கேரக்டரையும் லியோ படத்தில் விக்ரம் மற்றும் கைதி படத்தையும் ஆங்காங்கே கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் இதில் துருப்பு சீட்டாக விட்டுட்டு போன எல்லா சீன்களையும் ஒட்டுமொத்தமாக கொண்டு வரும் படமாக லோகி வெர்ஷன் 2.0 என்ற வீடியோ இணையதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக ராக்ஸ்டார் அனிருத் உருவாக்கின வீடியோவாக இருந்தாலும் பார்த்ததுமே மெய்சிலிர்க்கும் அளவிற்கு புல்லரித்து போகிறது.

அந்த அளவிற்கு ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் லோகேஷ். அடுத்தபடியாக விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா தான் இருப்பதிலேயே முக்கியமான கொடூர வில்லன் என்று அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால் தற்போது என்னவென்றால் இவரை விட மிகக் கொடூரமான ஒரு வில்லன் இருக்கிறார் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் இவர்களுக்கெல்லாம் வில்லாதி வில்லனாக இருக்கப் போவது யார் என்றால் லியோ தாஸ். சும்மா பெயரை கேட்டாலே அதிருதில்ல என்பதைப் போல ரோலக்சை விட லியோ கேரக்டர் இன்னும் வலுவாக அமையப்போகிறது. இதற்கிடையில் லோகேஷ் அளித்த ஒரு பேட்டியில் பொதுவாக நான் எடுக்கக் கூடிய எந்த படத்திலும் பிளாஷ்பேக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் லியோ படத்தில் வந்த ஃபிளாஷ்பேக் சும்மா கற்பனை கதையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்து லோகேஷ் எடுக்கக்கூடிய படங்களில் இதுக்கு ஒரு செக் வைக்க போகிறார். ஆக மொத்தத்தில் லோகியின் 2.0 வெர்ஷன் படத்தில் இன்னும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடக்கப்போகிறது.

bb7-vanitha

முதல் இடத்திற்காக பஜாரி போல் இறங்கிய வனிதாவின் வாரிசு.. சரிக்கு சரியாக நின்னு அடிக்கும் சைக்கோ

BB7 Promo: இதுவரை நடந்து முடிந்த ஆறு சீசன்களிலும் ரேங்கிங் டாஸ்க் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் ஏழாவது சீசனில் இன்று ரேங்கிங் டாஸ்க் போட்டியாளர்களிடம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு இந்த டாஸ்க் நடக்கும் போது போட்டியாளர்களிடம் நிறைய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. சிலருடைய சுயரூபம் எல்லாம் இந்த டாஸ்கின் மூலம் தான் வெளிப்படும்,

அந்த வகையில் சீசன் 7க்கான ரேங்கிங் டாஸ்கில் முதலிடம் டைட்டில் வின்னரையும், 15வது ரேங்க் எவிட் ஆகிற வாய்ப்பையும் குறிக்கும். இதில் முதல் இடத்தை பிரதீப் பிடித்துக் கொண்டு மற்றவர்கள் யாருக்குமே கொடுக்க மறுக்கிறார். ‘இந்த வீட்டில் என்டர்டைன்மெண்டா பெருசா நீங்க எதுவும் செய்யல, இந்த இடத்துல இருப்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை’ என நிக்சன் பிரதீப்பை முதலிடத்தில் இருந்து நகரச் சொல்கிறார்.

அவர் மட்டுமல்ல விஷ்ணுவும், ‘பிரதீப் முதலிடத்திற்கு தகுதியானவரே கிடையாது. நீங்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்தி இருக்கிறீர்கள்’ என முதல் இடத்தை விட்டு நகரச் சொல்கிறார். உடனே பிரதீப், ‘ப்ரோமோவுக்காக நான் விளையாடவில்லை’ என்று விஷ்ணுவுக்கு சவுக்கடி கொடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக வந்த போட்டியாளர்கள் எல்லாம் பிரதீப்பை கன்வின்ஸ் செய்து முதல் இடத்தை பிடித்துக்கொள்ள பார்க்கின்றனர்.

கடைசியாக வத்திக்குச்சி வனிதாவின் வாரிசு ஜோவிகாவிற்கும் பிரதீப்பிற்கும் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. ஜோவிகா பயன்படுத்தும் ஆடை, அணிகலன்கள் பார்த்தால் அவர் வசதியான வீட்டு பொண்ணு மாதிரி இருக்கு. ஆனா மிடில் கிளாசில் ஃபேமிலியில் இருந்து வந்த நான் இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று வனிதாவின் வாரிசுவுடன் பிரதீப் நின்னு விளையாடுகிறார்.

ஜோவிகாவும் பிரதீப்பிடம் தர லோக்கலாக இறங்கி பஜாரி போல் வாடா போடான்னு சண்டை போடுகிறார். இவருக்கு பின் மாயா, யுகேந்திரன் உள்ளிட்டோரெல்லாம் பிரதீப் நின்று கொண்டிருக்கும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என வாதாடுகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு சந்தக் கடை போலவே மாறிவிட்டது. அடிதடி சண்டை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒவ்வொரு நாளும் கொளுத்திப் போடும் வேலையை பார்க்கும் பிக் பாஸ் இந்த முறை ரேக்கிங் டாஸ்கின் மூலம் ஒருவர் மற்றவருடன் உச்சகட்ட அளவில் சண்டை போடும் அளவுக்கு பத்த வச்சுட்டார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பிரதீப் இடம் யாரும் இந்த முதல் இடத்தை மட்டும் பறித்து விட முடியாது. அவர்தான் இந்த டாஸ்கில் வென்று கோல்ட் ஸ்டார் வாங்க போகிறார்.

மேலும் ரேங்கிங் டாக்கில் முதலிடத்தைப் பிடித்த பிரதீப் தான், இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று பிக் பாஸ் ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். அவ்வப்போது இவர் சைக்கோ போல் நடந்து கொண்டாலும், மனதில் பட்டதை யோசிக்காமல் செய்கிறார். பிரதீப் சீசன் 7ன் டைட்டில் வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

தற்போது வெளியான பிக் பாஸ் சீசன் 7ன் பரபரப்பான ப்ரோமோ!