மேற்குவங்கத்தில் ரோட்டோரத்தில் அடிபட்ட கிடந்த சிறுத்தை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று பயத்தில் அந்த சிறுத்தை ஒருவர் மீது பாய்ந்து கடிக்கத் தொடங்கியது. பின்பு அங்கு இருப்பவர்கள் அதனை விரட்டி அந்த நபரின் உயிரை காப்பாற்றினர். உயிர் தப்பிய அந்த நபர் சிறு காயங்களுடன் நடந்து செல்லும் காட்சி பதற வைக்கிறது.
அடிபட்ட அந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு தற்போது மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதுபோன்ற வாயில்லா ஜீவனை துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாகும். இதுபோன்ற பல உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் வனத்துறையினர் இதனை பாதுகாக்க வேண்டும்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,
#WATCH West Bengal: An injured leopard attacked a man who was clicking its pictures in Alipurduar. The man sustained minor injuries, leopard has been taken for treatment and will be released in the wild after it recovers. pic.twitter.com/Jok8UFNrWw
— ANI (@ANI) August 19, 2019