மூன்றாவது மனைவியான விஜய் பட நடிகை.. விவாகரத்துக்கு என்னமா விளக்கம் கொடுக்கிறாங்க!

சினிமாவைப் பொருத்தவரை விவாகரத்து என்பது புதிதல்ல. பல நடிகர், நடிகைகள் ஒரே படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்பு சில கருத்து வேறுபாடுகளால் அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

மாடல் அழகியாக இருந்த பிபாஷா பாசு விஜய்யின் சச்சின் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிபாஷா. அதன்பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த இவர் மாதவனுக்கு ஜோடியாக பிரேக்கர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பிபாஷா பாசு 2002 இல் இருந்து 2011 வரை 9 ஆண்டுகளாக ஜான் ஆபிரகாமுடன் உறவில் இருந்தார். அதன்பிறகு பிபாஷா கரண் சிங் குரோவரை 2016 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கரண் சிங் ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர். கரண் சிங், ஷ்ரத்தா என்பவரை 2008 இல் திருமணம் செய்து கொண்டு 10 மாதங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2012 இல் ஜெனிஃபர் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2014இல் விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு கரண் சிங் மற்றும் பிபாஷா இருவரும் அலோன் படப்பிடிப்பை சந்தித்து காதலித்து வந்தனர். அதன்பிறகு இருவரின் மனங்களும் ஒத்துப் போனதால் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கரண் சிங்க்கு மூன்றாவது மனைவியாக பிபாஷா ஆனதால் பலரும் விமர்சித்து வந்தனர்.

அதற்கு பதிலளித்த பிபாஷா, விவாகரத்து பெற்றால் அந்த மனிதர்கள் தவறாக இருக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. அது அந்த சூழ்நிலையை பொறுத்ததுதான். நான் கரண் சிங் குரோவரின் மூன்றாவது மனைவியானதற்கு எல்லோரும் என்னை திட்டினார்கள்.

ஆனால் கரண் என் மீது மிகுந்த பாசமும் அதீத காதலும் வைத்துள்ளார், அதனால்தான் அவரை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என பிபாஷா கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் நேற்று கூட பிபாஷா பாசு தனது கணவர் கரண் சிங் குரோவருடன் காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்