யுத்த பூமியான பிக்பாஸில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி.. அபிஷேக் கொஞ்சம் ஓரம் போ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் அதிக எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 50 நாட்களை கடந்து விட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது.

புதிய நபரை பிக்பாஸ் வீட்டுக்குள் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக மக்களால் வெளியே அனுப்பப்பட்ட அபிஷேக் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தற்போது ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் விஜய் டிவி பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய நபரை வைல்ட் கார்டு என்ட்ரியாக அனுப்பியுள்ளது. பிரபல டான்ஸ் மாஸ்டர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக சென்றுள்ளார்.

இவர் ஊட்டியில் ஏடிஎஸ் என்ற நடனப் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவருடைய இந்த நடனப் பள்ளி தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்று. 2019 இல் அமெரிக்காவில் நடந்த உலக ஹிப்ஹாப் போட்டியில் இந்த நடன பள்ளியை சேர்ந்த இளைஞர்கள் பங்குபெற்று பலருடைய பாராட்டையும் பெற்றனர். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி  நம்பர் 1 மற்றும் கலர்ஸ் தமிழின் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் கோரியோகிராபராக பணியாற்றியுள்ளார்.

அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே குழப்பமும், சண்டையாக இருக்கும் பிக்பாஸ் வீட்டில் இந்த புதிய போட்டியாளரின் வரவை சக போட்டியாளர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அமீரை தங்களில் ஒருவராக அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா அவரின் வரவு பிக்பாஸ் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்துமா என்பது போன்ற எதிர்பார்ப்பு நம்மிடையே இருந்து வருகிறது.

யுத்த பூமியாக இருக்கும் பிக்பாஸ் வீட்டில் ஆர்வத்துடன் நுழையும் அமீர் அங்கு இருக்கும் சவால்களைக் கடந்து இறுதிப்போட்டி வரை தாக்குப் பிடிப்பாரா என்பதை நாம் பொருத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்