Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த நடிகையின் கணவர் எனக்கு பார்ட்னராக வந்தால் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் ரெடி.! ராய்லக்ஷ்மி பளீர்
பிரபல தனியார் தொலைகாட்ச்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்கினார் ஆரம்பத்தில் நிகழ்ச்சி டல் அடித்தாலும் போக போக பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளபிவிட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஜூன் 17 ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இதன் இரண்டாம் பாகத்தையும் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார், இதில் தனது அரசியல் களமாகவும் பயன்படுத்திகொல்வார் என பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல பிரபலங்களின் பெயர்கள் லிஸ்ட்டில் அடிபடுகிறது அந்த வகையில் நடிகை ராய்லக்ஷ்மி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும், சமீபகாலமாக தமிழில் எந்த படவய்ப்பும் இல்லாமல் இருந்தார் அதனால் அவர் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பினார் அங்கு அதீத கவர்ச்சி காட்டி நடித்து தனது மார்கெட்டை மீண்டும் பிடித்தார்.
அதன்பிறகு தமிழில் நீயா 2 ஆகிய படத்தில் நடித்து வருகிறார் , இந்த நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தனது பெயர் அடிபடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த பதிவில் எதற்க்காக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள்?ஏன்? ஏன்? என கேட்டுள்ளார்.
இவரின் பதிவிற்கு ரீ ட்விட் செய்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான பிபாஷாவின் கணவர் கரண் வி குருவர், அதில் அவர் கூறியதாவது நாங்கள் உங்களை பிக்பாஸ் 2 வீட்டில் பார்க்க விரும்புகிறோம் என கூறியுள்ளார், அதற்க்கு ராய் லக்ஷ்மி பதிலளித்துள்ளார், நீங்கள் என் துணையாக வந்தால் நான் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.
