நிறைய மறச்சிட்டாங்க, தப்பா போயிடுச்சு.. வெளியே போயும் புலம்பவிட்ட பிக்பாஸ்

தமிழ் திரைப்படங்களில் பல கானா பாடல்களை பாடி அசத்தி வருபவர் பாடகி இசைவாணி. ஆனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் மக்களிடம் அதிக பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் 50 நாட்களுக்கு மேல் இருந்த இசைவாணி சில வாரங்களுக்கு முன்பு எலிமினேட் ஆகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இறுதிவரை நீடிப்பார் என்று நினைத்த அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அதில் அவர் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் என்னை பார்க்கும் மக்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் நீங்கள் ஏன் அதிகம் பாடவில்லை, நாங்கள் உங்களை ரொம்பவும் எதிர்பார்த்தோம் என்று என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் நான் பிக் பாஸ் வீட்டில் நிறைய பாடல்களைப் பாடினேன்.

மேலும் அங்கு உள்ள போட்டியாளர்களுக்கு நான் பாடுவதற்கு கற்றுக் கொடுத்தேன். தனியாக இருக்கும் போது, பாத்திரம் கழுவும் போது என்று நான் பாடல்களைப் பாடிக் கொண்டுதான் இருந்தேன். அவை எல்லாம் நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை என்று வருத்தத்துடன் கூறி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் 24 மணி நேரமும் நடக்கும் நிகழ்வுகளை ஒரு மணி நேரமாக தொகுத்துதான் மக்களுக்கு காட்டுவார்கள்.

அப்படி காட்டும் பொழுது என்னை மட்டும் அதிகமாக காட்டமாட்டார்கள். மற்ற முக்கியமான காட்சிகளையும், சுவாரசியமான நிகழ்வுகளையும் தவறாமல் காட்ட வேண்டும். அதனால் தான் என்னுடைய பல செயல்கள் மறைக்கப்பட்டு விட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் கூட இசை வாணியிடம் பாடலை மறந்து விட்டீர்கள் போல, உங்களுடைய திறமையை காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் இவர் நான் பாடிக் கொண்டுதான் இருந்தேன் என்று கூறுவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் அங்கு இருந்த பாதி நாட்களில் தாமரையுடன் சண்டையிடுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்