பிக் பாஸ் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?. கேவலமான வேலை செஞ்சு சிக்கிய மாயா, பூர்ணிமா

BB7 Tamil: டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்ப்பதற்கு காரணம் மகிழ்ச்சிக்காகத்தான். ஆனால் சமீப காலமாக விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு ரத்த கொதிப்பு தான் அதிகமாகிறது. அந்த அளவுக்கு உள்ளே மாயா மற்றும் பூர்ணிமா செய்யும் அட்டூழியம் இருக்கிறது. இதை கண்டும் காணாதது போல் இருக்கும் பிக் பாஸ் தான் மக்களின் ஒட்டுமொத்த பிபியும் ஏறுவதற்கு காரணமாக இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து விதி மீறல் என்ற ஒரு விஷயத்தை அதிகமாக செய்வது மாயா மற்றும் பூர்ணிமா தான். மைக்கை கழட்டிவிட்டு பேசுவது, யாரை நாமினேட் செய்வது என்பது கலந்துரையாடுவது, தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவது என்று அத்தனையும் செய்துவிட்டு விளையாட்டில் நீட்டிக்கும் தகுதி இருப்பவர்களை சதி செய்து வெளியே அனுப்பி வருகிறார்கள்.

பார்வையாளர்களின் கண்துடைப்புக்காக பூர்ணிமாவை எதிர்த்து அவ்வப்போது சாட்டையை சுழட்டும் கமலஹாசன் மாயாவை கண்டு கொள்வதே இல்லை. சரவண விக்ரம் விஷயத்தில் ஏற்கனவே மக்கள் மாயா மீது ரொம்ப அதிருப்தியில் இருக்கிறார்கள். அதிலும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் மாயா மற்றும் பூர்ணிமா செய்யும் அட்டூழியம் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற அளவுக்கு போயிருக்கிறது.

Also Read:எனக்கு ஒரு கண்ணு போனா அவனுக்கு ரெண்டு கண்ணும் போகணும்.. விஷ்ணுவை காரி துப்பிய பூர்ணிமா

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற டாஸ்க்கில் யார் எலிமினேஷன் கார்டை தேர்வு செய்கிறார்களோ அவர்கள் ஒரு போட்டியாளரை அந்த டாஸ்க்கில் விளையாட விடாமல் வெளியேற்றலாம். முதன்முதலாக இந்த கார்டு வரும்போது ரவீனா அதை எடுத்து விஷ்ணுவை வெளியேற்றினார். அதன் பின்னர் மாயா மற்றும் பூர்ணிமா செய்த சம்பவங்கள் தான் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

கேவலமாக நடந்து கொண்ட மாயா மற்றும் பூர்ணிமா

மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் சேர்ந்து அந்த எலிமினேஷன் டாஸ்க்கில் நெயில் பாலிஷ் வைத்து மார்க் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு கார்டு வரும்போது கரெக்டாக அந்த எலிமினேஷன் கார்டை தேர்வு செய்து அவர்கள் நினைக்கும் நபர்களை வெளியே அனுப்புகிறார்கள். அப்படித்தான் தொடர்ந்து மணி, விஷ்ணு மற்றும் ரவீனாவை அவர்கள் வெளியே அனுப்பியது.

100 கேமராக்கள் இருக்கும் அந்த பிக் பாஸ் வீட்டில் இதை யாருமே கவனிக்கவில்லை என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அதையும் தாண்டி அர்ச்சனா இதை கண்டுபிடித்து பிக் பாஸ் இடம் சீக்கிரம் ஆக சொன்னார். ஆனால் பிக் பாஸ் அந்த புகாரை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தற்போது இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கிறது.

Also Read:பிக் பாஸில் அதிகமா நாமினேட் செய்யப்பட்ட 6 போட்டியாளர்கள்.. ஒரே ஆளை 8 முறை குத்தி கிழிச்ச ஹவுஸ் மேட்ஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்