மாயாவை விடாமல் துரத்தும் பூர்ணிமா.. புது பிளான் போடும் பிக்பாஸ் மூவேந்தர் அணி

Biggboss 7: எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசன் ரணகளமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு நீயா நானா என போட்டி போட்டுக் கொண்டு கன்டென்ட் கொடுத்து வருகின்றனர். அதில் இருக்கிற பெயரை டேமேஜ் செய்து கொண்டவர்கள் என்று பார்த்தால் அது மாயா, பூர்ணிமாவாக தான் இருக்க முடியும்.

அந்த அளவுக்கு அவர்கள் மீது ரசிகர்கள் கடும் வெறுப்புடன் இருக்கின்றனர். எப்போது இவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருக்கிறது. இந்நிலையில் நேற்று நிக்சன், அர்ச்சனா இருவருக்கும் இடையே நடந்த சண்டையும் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத மாயா கூட்டணி இப்போது நிகழ்ச்சி முடிந்து வெளியில் போய் எப்படி இருக்கலாம் என்று புது பிளானை போட்டு வருகிறார்கள். அதன்படி மாயாவை அட்டை பூச்சி போல் ஒட்டிக்கொண்டே திரியும் பூர்ணிமா அம்மா அப்பா கூட வேண்டாம் என்று கூறுவது தான் வேடிக்கை.

Also read: பெண்ணியமா பேசுற, இப்ப பாரு ஆன்ட்டி.. தொக்காக சிக்கிய மாயாவுக்கு ஆப்படிக்க போகும் அர்ச்சனா

அந்த வகையில் அவர் நிக்சனிடம் இவ்வளவு நாளு அம்மா அப்பா கூட இருந்தாச்சு. அதனால வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் நான் மாயா கூட தான் தங்க போறேன் என்று கூறுகிறார். உடனே நிக்சன் நானும் வெளியில் தனியா ஒரு ரூம் எடுத்து தங்கிடுவேன்.

அப்பப்ப உங்கள வந்து பார்த்துட்டு போறேன் என்று கூறுகிறார். எப்படியும் இவர்களுடைய பெயர் வெளியில் நாறி கிடக்குதுங்குறது தெரிஞ்சு போச்சு. அதனாலேயே இந்த மூவேந்தர் கூட்டணி ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதில் மாயா ஏற்கனவே ஐசுவை உங்க அம்மா அப்பா வீட்டுக்குள்ள விடலைன்னா என்னோட வீட்டுக்கு போயிடு என கூறியிருந்தார். இப்போது பூர்ணிமாவும் மாயாவை நம்பி தான் வெளியில் போகும் நிலையில் இருக்கிறார். அந்த அளவுக்கு இவர்களுடைய நட்பு நங்கூரமாய் உள்ளது.

Also read: அர்ச்சனாவுக்கு தண்ணி, தம் அடிக்கிற பழக்கம் இருக்காம்.. குடிச்சிட்டு கீழ விழுந்த நீ யோக்கியமா.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்