பிக் பாஸ் முடிந்தும் ஓவர் நைட்டில் ட்ரெண்டான ராஜு பாய்.. நீங்க வேற லெவல் ப்ரோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் மக்கள் எல்லோரும் எதிர்பார்த்தபடி அந்த பிக்பாஸ் டைட்டிலை ராஜு வென்றார். இதை கொண்டாடும் விதத்தில் விஜய் டிவியில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் பிக்பாஸில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜுவுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதிலும் மக்களின் பேவரைட் நாயகன் என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

மேலும் யாரும் எதிர்பாராத விதமாக ராஜுவின் ரசிகர்கள் அனைவரும் மேடைக்கு வந்து அவருக்கு மிகப்பெரிய மாலை ஒன்றை அணிவித்து அவரை கௌரவப்படுத்தினர். இது அங்கிருந்த பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதிலும் ராஜு இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் முகத்தை வைத்தே தெரிந்து கொள்ள முடிந்தது. ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அன்பை எதிர்பார்க்காத ராஜு ஒரு நிமிடம் பேச்சற்று நின்றார். பின்னர் அனைவருக்கும் கைகொடுத்து அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வால் தற்போது ராஜீ, சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார். அதிலும் அவர் பெரியவர்களை மட்டுமல்லாமல் குழந்தை ரசிகர்களையும் பிடித்து விட்டதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்து வருகின்றனர்.

மேலும் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் ராஜு தான் மக்களை முழுதாக மகிழ்வித்து இன்று மக்களின் நாயகனாக உருவெடுத்துள்ளார் என்று ரசிகர்கள் அவரை சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்