பிக்பாஸில் இறுதி சுற்றுக்கு செல்லப்போகும் 3 போட்டியாளர்கள்.. சரியான கணிப்பு

தற்பொழுது பிக் பாஸ் சீசன்5 பிரமாண்டமாக தொடங்கி இரண்டு மாதங்களை எட்ட உள்ளது. இந்நிலையில் வார வாரம் கமல் வந்து போட்டியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளையும் நிறைகளையும் தட்டிக் கேட்பார். மேலும் பார்வையாளர்களிடம் போட்டியாளர்களை குறித்து அவர்களின் கருத்துக்களையும் அவ்வப்போது கேட்பார்.

அந்த விதமாக இந்த முறை பார்வையாளர்களிடம் டப் கன்டஸ்டன்ட் என யாரை நினைக்கிறீர்கள் என்று கேட்டார். மேலும் போட்டியின் இறுதி வரை யார் வருவார் என்றும் நினைக்கிறீர்கள் என மக்களிடம் கமல் கேட்டார். அதற்கு பெரும்பாலும் மக்கள் தரப்பில் இருந்து வந்த பதில் ராஜு ஜெயமோகன் ஒரு கடுமையான போட்டியாளராக சிறப்பாக விளையாடி வருகிறார் எனவும், மேலும் பிரியங்காவும் சிபியும் அதேபோல் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் எனவும் கூறினர்.

மேலும் ராஜூ, சிபி, பிரியங்கா மூவரும் உறுதியாக போட்டியின் இறுதி வரை வரலாம் எனவும் ஏன் டைட்டில் வின்னர் ஆகவும் கூட ஆகலாம் எனவும் மக்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகிறது இவ்வாறு இந்த மூன்று போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் ஆதரவையும் பெற்று வரும் நிலையான போட்டியாளர்களாக உள்ளனர்.

அவ்வாறு பிக்பாஸ் சீசன் 5 வில் போட்டியாளராக களமிறங்கியுள்ள ராஜு ஜெயமோகன் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர். மேலும் இவர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி சிந்தனைச் சிற்பியாக இருந்து இந்த போட்டியை தெளிவாக பிளே செய்து வருகிறார். மேலும் இவரை நடிகராக பார்த்த மக்களுக்கு இந்தப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தங்களின் குடும்பத்தில் ஒரு உறவினர் ஆகவே பார்க்கும் அளவிற்கு மக்களின் அன்பை சம்பாதித்து வருகின்றார். ராஜு இவ்வாறு சிறந்த என்டர்டெய்னர் ஆகவும் இருந்து மக்களை மகிழ்வித்து வருவதால் இவர் போட்டியின் இறுதி வரை வரலாம் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப்போல் அடுத்ததாக மக்களின் மத்தியில் டப் கன்டஸ்டன்ட் என்று பெயர் வாங்கி மக்களின் கணிப்பில் போட்டியின் இறுதி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் நம்பர் 1 பெண் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அட்டகாசமாக விளையாடி மக்களின் அதிக செல்வாக்கையும் ஆதரவையும் பெற்று வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து அடுத்தபடியாக மக்களால், சிறப்பாக விளையாடி கடுமையான போட்டியாளராக போட்டியின் பைனல் வரை வருவார் என எதிர்பார்க்கப்படும் அடுத்த கன்டஸ்டன்ட் சிபி புவனச்சந்திரன். இவர் ஒரு திரைப்பட நடிகராக ‘வஞ்சகர் உலகம்’ படம் மூலம் அறிமுகமாகி பின்னர் ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். தற்போது இவரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகின்றவர் என மக்களால் கணிக்கப்படுகிறார்.

இவ்வாறு கமல் பார்வையாளர்களின் கருத்தை கேட்டு போட்டியின் இறுதி வரை வரும் நபர்கள் ராஜு, பிரியங்கா, சிபி இவர்கள்தான் என்பதை மக்களிடம் மேலும் உறுதிப்படுத்தினார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்