இந்த வார நாமினேஷன் லிஸ்டிலிருந்து தப்பித்த ஒரே நபர்.. அடுத்து பொட்டியை கட்டும் நபர் இவரா?

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 70 நாட்களில் நிறைவு செய்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

ஆகையால் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது போட்டிகள் விறுவிறுப்புடனும் கடுமையாகவும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸில் பிக் பாஸ் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதாவது இதுவரை பிக்பாஸ் வீட்டில் ஒரு சிலர், நாணயத்தின் ஆதிக்கத்தால் நாமினேஷன் லிஸ்ட்டிலிருந்து தப்பித்து எலிமினேஷன் ஆகாமல் எஸ்கேப் ஆகிவிட்டனர். ஆனால் இந்த முறை வீட்டில் இருக்கும் 11 பேரையும் பிக் பாஸ் நாமினேட் செய்துள்ளார்.

இருப்பினும் இந்த வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்கின் அடிப்படையில் ஒரு சிலர் காப்பாற்றப்படுவார்கள் என்று பிக்பாஸ் தெரிவித்திருந்தார். ஆகையால் நேற்றைய நிகழ்ச்சியில் நடைபெற்ற தரவரிசை பட்டியலிடப்படும் ரங்கிங் டாஸ்க்கின் போது முதலிடத்தை தக்க வைத்த சிபி எலிமினேஷனிலிருந்து தப்பித்து விட்டார்.

இருப்பினும் இனி வரும் நாட்களில் நடைபெறும் டாஸ்கின் மூலம் இன்னும் சிலர் காப்பாற்றப்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் இந்த சீசன் துவங்கப்பட்ட போது சுவாரசியம் மிகுந்த போட்டியாளராக கருதப்பட்ட நிரூப், கடந்த சில நாட்களாகவே அமைதியுடனும், விளையாட்டில் ஈடுபாடு இல்லாமலும் இருந்து கொண்டிருக்கிறார்.

ஆகையால் இவ்வளவு வாரம் தன்னுடைய நாணயத்தை வைத்து தப்பித்துக் கொண்டிருந்த நிரூப், நிச்சயம் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் மக்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையிலும் வரும் வாரத்தில் நடைபெறும் டாக்கிங் அடிப்படையிலும் நிரூப், எலிமினேஷனிலிருந்து தப்பித்தாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்