பிக்பாஸில் இந்த வாரம் உறுதியா வெளியேறப் போவது இவர்தான்.. இணையத்தில் கசிந்த ஓட்டிங் லிஸ்ட்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் சிபி, இமான் அண்ணாச்சி, அமீர், அபினை, நிரூப், தாமரைச்செல்வி, அக்ஷரா ஆகிய 7 பேருக்கும் மக்கள் தங்களது வாக்குகளை அளித்து கொண்டிருக்கின்றன.

இந்த ஓட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அதிக வாக்குகளைப் பெற்ற
சிபி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அமீர், இமான் அண்ணாச்சி, நிரூப் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளனர். கடைசி மூன்று இடத்தை அக்ஷரா, தாமரைச்செல்வி, அபினை ஆகியோர் பிடித்துள்ளனர்.

எனவே இந்த ஓட்டிங் லிஸ்டின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அபினை எப்பொழுதுமே கடைசி நபராக காப்பாற்றப்படுவார். ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் குறைந்த நபராக காணப்படும் அபினை, தன்னுடைய இருப்பை பிக்பாஸ் வீட்டில் பதிவு செய்ய தவறி விடுகிறார்.

bb5-voting-list1
bb5-voting-list

அத்துடன் அபினை பிக்பாஸ் வீட்டில் விளையாடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது. ஆகையால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் அபினை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டிக் களம் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருப்பதால் இந்த வாரம் இரண்டு நபர் எலிமினேட் ஆவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

bb5-voting-list2
bb5-voting-list

அபினையை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அதிகமாக தன்னுடைய கோபத்தை ஆக்ரோஷத்தோடு அதிக சத்தத்துடன் காட்டிக்கொண்டிருக்கும் தாமரை ஓட்டிங் லிஸ்டில் கடைசி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

எனவே அபினை மற்றும் தாமரை இருவரும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் வரும் ஞாயிற்றுக்கிழமை யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்