கீழ்பாக்கம் ஹாஸ்பிடலாக மாறிய பிக்பாஸ் வீடு.. இன்னும் என்னென்ன கொடுமையை பாக்கணுமோ

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் மக்களுக்கு பிடித்தமான சண்டை சச்சரவு, சோகம், பாசம் போன்றவற்றை கொண்டுள்ள கலவையான நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே கடந்த 3 வாரங்களுக்கு முன்பு பஞ்சதந்திர நாணயங்களை தன்வசப்படுத்தி கூடுதல் ஆளுமையை பிக்பாஸ் வீட்டில் ஒரு சிலர் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் நீர் நாணயத்தை வசப்படுத்திய வருண் இந்த வாரத்தில் பாத்ரூம் ஆளுமையை பெற்றுள்ளார். ஆகையால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பாத்ரூமை பயன்படுத்த வேண்டுமென்றால் வருண் கொடுக்கும் டாஸ்கை முடித்துவிட்டதால் பாத்ரூமை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறுதான் கடந்த திங்கட்கிழமை முதல் பிக்பாஸ் போட்டியாளர்கள் பாத்ரூமை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் வருண் சக போட்டியாளர்களுக்கு புதுவிதமான ஒன்றைக் கொடுத்து பிக்பாஸ் வீட்டையே கீழ்ப்பாக்க பைத்தியக்காரா ஆஸ்பத்திரியாகவே மாற்றி விட்டார்.

ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய கற்பனை வளத்தால், இல்லாததை இருப்பது போல் நினைத்துக்கொண்டு பேச வேண்டும் என்ற டாஸ்கை வருண் கொடுத்துவிட்டார்.

அதன் பிறகு போட்டியாளர்கள் அனைவரும் பாத்ரூமில் இஷ்டத்திற்கு தங்களுடைய கற்பனை வளத்தால் பைத்தியங்கள் போலவே உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன..

இதைப் பார்க்கும்போது பிக்பாஸ் ரசிகர்கள் வருண் தன்னுடைய நாணயத்தின் ஆற்றலால் பிக்பாஸ் போட்டியாளர்களை வச்சு செய்கின்றார் என்று கிண்டல் அடிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்