தமிழ் சினிமாவில் பற்றிய படத்தின் மூலம் அறிமுகமானவர் பூமிகா. இப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனால் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கொலையுதிர் காலம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை அதனால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார் தற்போது மீண்டும் கண்ணை நம்பாதே எனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்து வந்த பூமிகா தற்போது முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக வெற்றி பெறுவதை விட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பூமிகா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருவார். மேலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 43 வயதாகும் பூமிகா இளமையாக இருப்பதாக கூறி வருகின்றனர். தற்போது பல படங்கள் நடித்து வருவதால் இவரது நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன அதனால் தற்போது பூமிகா மகிழ்ச்சியில் உள்ளார்.