மகளை அனாதை என்று சொன்ன பாரதி.. கொதித்துப் போய் கண்ணம்மா எடுத்த முடிவு

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதிகண்ணம்மா. இத்தொடர் தற்போது கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அப்போதும் கூட இத்தொடரில் சுவாரசியம் இல்லாமல் உச்சகட்ட அருவையாக இழுத்து வருவதால் ரசிகர்களுக்கு இத்தொடர் மீது சற்று எரிச்சல் உண்டாக்கியுள்ளது.

குழந்தை பெற்று கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் இப்போது தான் இது தன் குழந்தையா என்று டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க பாரதி முன்வந்து உள்ளார். மேலும் தனது வளர்ப்பு மகள் என நினைத்துக் கொண்டிருக்கும் ஹேமாவிடம் அவளுடைய அம்மா என்று பாரதி தன்னுடைய காதலி புகைப்படத்தை கொடுத்திருந்தார்.

Also Read : பாக்யாயோட அருமை இப்ப தான் தெரியுது.. ஹனிமூன் முடிந்ததும் கசந்த காதலி

இவர் தனது அம்மா இல்லை என தெரிந்து கொண்ட ஹேமா பாரதியிடம் என்னுடைய அம்மா யார் என்று நச்சரிக்கிறார். கடைசியில் அனாதை ஆசிரமத்தில் இருந்து உன்னை எடுத்து வந்தோம். உன்னுடைய அம்மா, அப்பா யார் என்பது எங்களுக்கு தெரியாது என பாரதி கூறுகிறார்.

இதைக் கேட்டு ஹேமா நான் ஒரு அனாதையாய் என மயக்கம் அடைகிறார். அதன் பின்பு ஹேமா சரியான பிறகு பாரதி இடம் அழுகிறார். உனக்கு அப்பா நான் இருக்கிறேன் என பாரதி ஆறுதல் கூறுகிறார். இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சௌந்தர்யா தனது மருமகள் கண்ணம்மாவுக்கு போன் செய்து சொல்கிறார்.

Also Read : கிளாமர் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ரட்சிதா.. பிக்பாஸ் மேடையில் போட்ட கவர்ச்சி ஆட்டம்

இதைக் கேட்ட கண்ணம்மா நிலை குழைந்து போகிறார். தான் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை அவர் அனாதை என்று சொன்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இப்போதே நான் அங்கு வந்து எல்லா உண்மையும் சொல்ல நினைக்கிறேன் என்று கண்ணம்மா கதறி அழுகிறார்.

ஆனால் சௌந்தர்யா சமாதானப்படுத்தியதால் கண்ணம்மா வேறு வழி இல்லாமல் அமைதி கொள்கிறார். இந்நிலையில் வெண்பா போன் செய்து பாரதியிடம் நச்சரித்து வருகிறார். டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் மட்டும் எனக்கு பிறந்த குழந்தைகள் இவர்கள் என்று தெரிந்தால் வெண்பாவை கல்யாணம் செய்ய மாட்டேன் என்பதில் பாரதி உறுதியாக உள்ளார்.

Also Read : 2வது விவாகரத்துக்கு ரெடியான கோபி.. ராதிகா, ஹனிமூன் வந்த என்ன பைத்தியமாக்கிட்டா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்