மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய பாரதி.. இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம்

விஜய் டிவி ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பாரதியும், கண்ணம்மாவும் தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.

கண்ணம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட பாரதி எட்டு வருடங்களாக கண்ணம்மாவை பிரிந்து வாழ்கிறார். இதனால் எப்போதும் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாரதியும், கண்ணம்மாவும் சந்தோஷமாக இருப்பது போன்ற காட்சிகள் அடிக்கடி வரும். ஆனால் அது சௌந்தர்யாவின் கனவாகத்தான் இருக்கும். இதனால் பாரதிகண்ணம்மா தொடரின் இயக்குநர் மேல் ரசிகர்கள் கோபமாக இருந்தார்கள்.

ஆனால் இந்த வார தொடக்கத்திலேயே கண்ணம்மாவை பாரதி ஏற்றுக் கொள்வது போன்ற புரோமோ வெளியாகியிருந்தது. அதில் இன்னும் ஐந்து நாட்களில், இன்னும் நான்கு நாட்களில் என நாட்களை குறைத்துக்கொண்டு வந்தார்கள். இதனால் கண்டிப்பாக இது கனவாக இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த அந்த எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில் பாரதி, தவறு என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் நடப்பது. நீ தவறு செய்ததை ஒப்புக் கொண்டால் போதும் நாம் சந்தோசமாக வாழலாம் என்று கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடுகிறார் பாரதி.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கண்ணம்மா ஒரு வார்த்தையும் பேசாமல் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார். அங்கு உள்ள அனைவரும் கண்ணம்மாவை தடுத்தும் அவர் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

இதற்கு பழையபடி பாரதி கோபமாகவே இருந்திருக்கலாம். ஆனால் பாரதி திருந்தியது போல் காட்டி மறுபடியும் முருங்கை மரம் ஏறியது போல பாரதி, கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகப்படுவது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோனில் இருந்து இருக்கலாம் என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்