நடிப்பில் பிச்சு உதறும் பாக்கியா புருஷன்.. ஊருக்குத்தான் உபதேசமா கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் அவ்வப்போது சிறிது தடுமாறினாலும் ஓரளவுக்கு விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. அதில் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்துகொள்வதற்கு பல தகிடுதத்தங்கள் செய்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் அவருடைய மகன் செழியன் தற்போது தன் மனைவியிடம் கோபப்பட்டு விவாகரத்து செய்து விடுவேன் என்று கூறி சண்டையிடுகிறார். இதை பார்க்கும் கோபி தற்போது செழியன் மற்றும் ஜெனி இருவருக்கும் அறிவுரை வழங்குகிறார்.

அதில் கோபி இருவரிடமும் விவகாரத்து என்று பெரிய வார்த்தைகளை பேசக்கூடாது. கல்யாண வாழ்க்கை என்றால் கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும் நீங்கள் தான் அதை சமாளித்து செல்ல வேண்டும். முதலில் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

அதில் நிச்சயமாக பிரச்சனைகள் வரும். ஆனால் அதை எல்லாம் யோசிக்காமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். மனதில் உண்மையான அன்பு இருந்தால் இதையெல்லாம் தாண்டி வந்து விடலாம். கல்யாணம் ஆகி முதல் இரண்டு வருடங்களை தாண்டி விட்டால் அதற்கப்புறம் வாழ்க்கையில் எல்லாமே சக்சஸ் தான்.

அதனால் சண்டை போடாமல் சந்தோஷமாக மனசுவிட்டுப் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறார். இதைக் கேட்ட அவர்கள் இருவரும் சம்மதமாக தலையை ஆட்டுகின்றனர். தற்போது கோபி பேசும் இந்த வீடியோ மீடியாவில் வைரலாகி வருகிறது.

தன் மகனுக்கு அட்வைஸ் பண்ணும் கோபி அவ்வளவு ஒழுங்காகவா இருக்கிறார். திருமணமாகி மருமகள் வந்த பிறகும் பாக்கியாவை பிடிக்காமல் ராதிகாவை தேடிச் செல்லும் இவர் மகனுக்கு அட்வைஸ் பண்ணுவது வேடிக்கையாக இருக்கிறது. ஊருக்குத்தான் உங்கள் உபதேசமா என்று ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது கலாய்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்