மணமேடையில் இருந்து இறங்கிய சக்களத்தி.. கோபியை வெளுத்து வாங்கும் மாமியார்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறார்.  ஆனால் ராதிகாவும் இப்போது கோபியை திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் திருமண மேடையில் இருந்து கிளம்பி இருக்கிறார். அந்த திருமணத்திற்கு பாக்யா சமைத்துக் கொடுக்கும் ஆர்டரை எடுத்திருக்கிறார்.

இந்த ஆர்டரை நல்லபடியாக முடித்துக் கொடுத்தால்தான் இன்னும் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால் இது தனது கணவர் கோபியின் கல்யாணத்திற்காக ஆர்டர் என்பது அந்த மண்டபத்திற்கு வந்த பிறகுதான் தெரிகிறது. அங்கு கோபி ராதிகாவை திருமண கோலத்தில் பார்த்த பிறகு பாக்யா கதி கலங்கினார்.

Also Read: பாக்யா முன் கோபி செய்த கேவலமான வேலை.. மானங்கெட்ட சீரியலா இருக்கே

இருப்பினும் மனதை தேற்றிக் கொண்டு சமையல் வேலையை பார்க்கிறார். கோபிக்கு திருமணம் ஆகப் போகிற விஷயத்தை அறிந்த கோபியின் அப்பா ராமமூர்த்தி மண்டபத்திற்கு வந்து கோபியுடன் ரகளை செய்கிறார். கோபியை கண்டபடி திட்டிய ராமமூர்த்தி ஒரு கட்டத்தில் அவரை அடிக்க கை ஓங்குகிறார்.

அப்பாவின் கையை தடுத்து நிறுத்திய கோபி, மண்டபத்தை விட்டு வெளியே போங்கள் என்று கழுத்தைப் பிடித்து தள்ளுகிறார். பெற்ற தகப்பனை இப்படி அவமானப்படுத்தும் கோபியை, பாக்யா எரிக்கும் அளவுக்கு முறைகிறார் பிறகு ராமமூர்த்தி வீட்டுக்குப் போகச் சொல்கிறார்.

Also Read: இதைவிட ஒரு கேவலமான சீரியல் எடுக்க முடியாது.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

இந்த ஆர்டரை முடித்து விட்டு நானும் வந்துவிடுகிறேன் என்று சமாதானப்படுத்தி தன்னுடைய மாமனாரை அனுப்புகிறார். இப்படி வரிசையாக பாக்யாவின் குடும்பத்தினர் வந்து திருமணத்தில் ரகளை செய்ததால் ராதிகா மேடையில் இருந்து இறங்கிய விடுகிறார்.

அதன்பிறகு ராதிகாவை சமாதானப்படுத்தும் ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் மறுபடியும் மேடைக்கு வர அழைக்கின்றனர். ‘இனிமேல் ராதிகாவின் மனம் புண்படும்படி உங்களது குடும்பத்தினர் யாரும் வந்து தகாத வார்த்தைகளால் பேசக்கூடாது அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று கோபியை மாமியார் திட்டுகிறார்.

Also Read: புத்தம் புது போட்டியாளர்களுடன் களமிறங்கும் ஆண்டவர்.. பிக்பாஸ் கிராண்ட் ஓப்பனிங் எப்போது தெரியுமா?

பிறகு சமைத்த உணவுகளை வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு பரிமாறும் பாக்யா, அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதுடன் மணக்கோலத்தில் இருக்கும் கோபி ராதிகாவை மேடையில் வைத்து பார்க்கும்போது தாங்கமுடியாமல் அழுகிறார்.

இப்படி சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லாமல், குடும்பங்களுக்கு தவறான உதாரணத்தை காட்டிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு சோஷியல் மீடியாவில் இருந்து எதிர்ப்புகள் கிளம்புகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்