அசால்டாக சம்பவம் பண்ணிய பாக்கியா.. கைவிட்டு போன பிசினஸ் என்னாச்சு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது பாக்கியா கின்னஸ் சாதனை படைப்பதற்காக 100 விதமான சமையலை ஒரு மணி நேரத்தில் செய்கிறார். இதற்காக ஊடகங்களும் அங்கு வந்துள்ளது.

கிட்டதட்ட ஒரு மணி நேரம் முடிந்த நிலையில் 99 விதமான உணவுகள் மட்டுமே இருப்பதாக பேட்டியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாக்யா ஒரு நிமிஷம் இருங்கள் என்று சொல்லி விட்டு அங்கேயே மறந்து வைத்த ஊறுகாய்வை எடுத்து வருகிறார். ஒருவழியாக 100 விதமான சமையலை ஒரு மணி நேரத்தில் முடித்து சாதனை படைத்துள்ளார் பாக்கியா.

இந்நிலையில் பேட்டியாளர்களிடம் நான் இப்போதுதான் தொழில் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது, இப்போதான் கொஞ்சம் பிசினஸ் டெவலப் ஆன நிலையில் நான் தப்பு செஞ்சதா பத்திரிக்கை, டிவில போட்டீங்க ஆனால் நான் தப்பு செய்யலன்னு சொன்னப்ப நீங்க வரல, இது உங்களுக்கு ஒரு நாள் நியூஸ் இருக்கலாம், ஆனால் அதுதான் எங்களுக்கு வாழ்க்கை என சரியான பதிலடி கொடுக்கிறார் பாக்யா.

இந்நிலையில் எல்லோரும் பாக்கியாவிற்கு வாழ்த்து சொல்கிறார்கள். இந்தச் செய்தி எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது. உடனே இதை பார்த்த ராதிகா, கோபியிடம் நம்ம கல்யாணம் கண்டிப்பா பாக்கியா முன்னிலையில் நடக்கணும் என கூறுகிறார்.

உடனே கோபி மரண பீதியில் உள்ளார். பாக்கியாவை இப்படி புகழ்ந்து பேசறாளே, ஒரு நாள் என்னோட மனைவி தான் பாக்யானு தெரிஞ்சா என்னாகும் என கோபி பயப்படுகிறார். மேலும் மறுபக்கம் பாக்யாவிடம் வேலை பார்த்த பெண்கள் இந்த விஷயம் தெரிந்து மீண்டும் வந்து வேலைக்கு சேர்கிறார்கள்.

அதேபோல் சாப்பாடு வேண்டாம் என சொன்னவர்களும் தற்போது பாக்கியாவிற்கு போன் செய்து மீண்டும் சாப்பாடு தருமாறு கூறுகிறார்கள். ஒருவழியாக படுத்த பாக்யாவின் பிசினஸை தூக்கி நிறுத்தியுள்ளார் எழில். இவ்வாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்த வார பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்