மூஞ்சிக்கு நேராக கிழிகிழினு கிழித்த பாக்யா.. விழி பிதுங்கி நிற்கும் கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருக்கும் கோபி, மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போட்ட பிளான் அனைத்தும் நல்லபடியாக சென்று கொண்டு இருந்த நிலையில் திடீரென்று குடிபோதையில் அவனையே அறியாமல் பாக்யா தன்னுடைய மனைவி என்ற விஷயத்தை ராதிகாவிடம் போட்டு உடைக்கிறான்.

ராதிகாவின் உயிர் தோழியான பாக்யாவின் வாழ்க்கையை கெடுக்க கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்த ராதிகாவை அவளுடைய அம்மா திசை மாற்றி விடுகிறாள். கோபியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் எந்த தவறும் இல்லை என ராதிகாவின் அம்மா உசுப்பேற்றியதும் ராதிகாவும் தன்னுடைய மகள் மயூவிற்காக அந்த முடிவை எடுக்கப் போகிறாள்.

இது ஒருபுறமிருக்க பாக்யாவிடம் வேலை செய்யும் பெண் ஒருவர் கோபியை ஒரு குழந்தையுடன் பார்த்ததாகவும் அந்தக் குழந்தையுடன் கோபி, தன்னுடைய குழந்தை போலவே பாசமாக நடந்து கொண்டதை பார்த்துவிட்டு அதை பாக்யாவிடம் செய்கிறார். ஏற்கனவே பாக்யா, கோபியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது ஊர்ஜிதம் ஆகி வருவதால் அதை கோபியிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என கோபியிடம் இதைப் பற்றி கேட்கிறாள்.

அதுமட்டுமன்றி ஏற்கனவே கோபியின் காரிலிருந்து பிளவுஸ் தைப்பதற்கான பில் ஒன்றை எடுத்ததால், அதைக் காண்பித்து ‘இது யாருக்காக பிளவுஸ் தைத்து கொடுத்த பில்’ கொஞ்ச நாளாகவே கோபியின் நடவடிக்கை சரியில்லை என்றும் நடுஇரவில் யாருடன் கொஞ்சிக் குலவி பேசுகிறீர். என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரிந்தே ஆக வேண்டும்  எனபாக்யா கோபியின் மீது இருந்த உச்சகட்ட சந்தோஷத்தை மூஞ்சிக்கு நேராக அதை வெளிப்படுத்தி கிழிகிழினு கிழிக்கிறாள்.

இதற்கு என்ன சொல்வது என்ன தெரியாமல் கோபி ஓங்கிப் பேசி பாக்யாவின் வாயை அடைக்க பார்க்கிறான். இதன் பிறகு இவர்கள் இருவரும் போடும் சத்தத்தை கேட்டு வீட்டில் இருப்பவர்கள் யாராவது பாக்யாவின் அறைக்கு வந்தால் நிச்சயம் இவர்கள் இந்த சண்டையை நிறுத்தி விடுவார்கள். ‘அப்பாடா தப்பிச்சோம்’ என்று கோபியும் அந்த டாப்பிக்கை மறுபடி பேசாமல் தவிர்த்துவிடுவான்.

இருப்பினும் பாக்யாவிற்கு கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது உறுதியானதால் தம்முடைய வாழ்க்கை இப்படி நாசமா போச்சே என்று, கணவன்தான் கண்கண்ட தெய்வம் என இவ்வளவு நாள் நம்பியிருந்த பாக்யா இனி வரும் நாட்களில் கோபியை நிரந்தரமாக விலக முயற்சிப்பாள். இதற்கெல்லாம் கவலைப்படாத கோபி, இது தான் நல்ல சமயம் ராதிகாவை எப்படியாவது சமாதானப்படுத்தி இரண்டாவது திருமணம் செய்து கொள்வான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்