சுருதி செய்த அதே தவறை செய்த இசைவாணி.. சூனிய கிளவியாக மாறிய தாமரை!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. எனவே ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமை அன்று உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் செய்யப்பட்ட ஒரு நபர் மக்கள் அளித்த குறைந்த ஓட்டின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் இந்த வாரத்தில் கானா பாடகி இசைவாணி எலிமினேட் செய்யப்படவுள்ளார். இவர் தன்னுடைய திறமையான பாடலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிக்காட்டாமல் சக போட்டியாளர்கள் உடன் சண்டை போட்டுக்கொண்டும் மூஞ்சி தூக்கிக்கொண்டு பேசியும் பிக் பாஸ் ரசிகர்களை சலிப்படைய செய்தார்.

இதனால் தங்களுடைய ஓட்டின் மூலம் மக்கள் இசைவாணிக்கு பதிலடி கொடுத்து விட்டனர். மேலும் இசைவாணி வீட்டில் உள்ள வயதில் மூத்தவர்களான இமான் அண்ணாச்சி மற்றும் தாமரையுடன் பெரிதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

குறிப்பாக தாமரையுடன் கடந்த சில நாட்களாக இவர் காரசாரமான சண்டை அரங்கேறுகிறது. மேலும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாட்களிலிருந்தே தாமரையுடன் சண்டை போட்ட நமிதா மாரிமுத்து, சின்ன பொண்ணு, சுருதி இவர்களைத் தொடர்ந்து இசைவாணியும் தற்போது எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

எனவே தாமரையை தொட்டால் ஆபத்து நமக்கு தான் என்று பிக்பாஸ் போட்டியாளர்கள் ஓரளவு புரிந்து வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலை தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் உருவாகியுள்ளது.

அத்துடன் நேற்றைய நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் கூட தாமரை இந்த சீசனில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்