தாமரையை வலையில் சிக்க வைத்து பிரியங்கா.. விறுவிறுப்பாக செல்லும் டிக்கெட் டு ஃபினாலே!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னிலையில் கடைசி சுற்றுக்கு செல்லும் ஒரு நபரை தேர்வு செய்வதற்காக ‘டிக்கெட் டு பினாலே’ என்ற டாஸ்க் இந்த வாரம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு நபரை தேர்வு செய்து, அவரை டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவ்வாறு வீட்டில் இருக்கும் 9 போட்டியாளர்களும், 5 பேர் நிரூப்பையும், 3 பேர் தாமரை செல்வியையும் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து நிரூப்பிற்கு கருப்பு ரோஜா கொடுத்து டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரியங்கா தாமரைச் செல்வியின் வாயைப் பிடுங்கி, அவர் வாயாலேயே இந்த வீட்டில் யார் வெற்றி பெற்றால் எனக்கு சந்தோசம் என்று பெருந்தன்மையாக பிரியங்கா தாமரையில் கூற வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய பிரியங்கா, ‘அப்ப நீ வெற்றி பெற ஆசை இல்லையா?’ என்று கேட்க, அதற்கு தாமரைச் செல்வி, ‘எனக்கு ஆசை இல்லை’ என்று சற்றும் யோசிக்காமல் கூறிவிட்டார்.

இதனால் சக போட்டியாளர்களும் தாமரை, இந்த டிக்கெட் டு பினாலே போட்டிக்கு தகுதியற்றவர் என்று அடுத்தடுத்த ரவுண்டுகளில் விவாதிக்க துருப்புச் சீட்டாக மாறிவிட்டது. இவ்வாறு பிரியங்கா தாமரையின் வாயை கிலரி வம்புக்கிழுத்து வசமாக சிக்க வைத்தார்.

இருப்பினும் தாமரை பிக்பாஸ் வீட்டில் சில சமயம் என்ன பேசுவது, எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய புரிதல் இல்லாமல் செய்வது சக போட்டியாளர்களை எரிச்சலடையச் செய்கிறது. நாடகக் கலைஞரான தாமரை செல்விக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருப்பதால், அவர் டிக்கெட் டு பினாலே ரவுண்டில் வெற்றி பெறாவிட்டாலும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் தாமரைக்கு மக்கள் அதிக ஓட்டுகளை கொடுத்து சப்போர்ட் செய்வார்கள்.

இவ்வாறு இந்த வாரம் துவங்கப்பட்ட முதல் நாளிலேயே டிக்கெட் டு பினாலே டாஸ்க்கின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சி கூடுதல் விருவிருப்புடன் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்