விவாகரத்தை மறைத்த காரணம் இதுதான்.. முதல் முறையாக ஓப்பனாக பேசிய இசைவாணி!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் முதல் ஆளாக நுழைந்த கானா பாடகி இசைவாணி, 50 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதன் பிறகு மக்கள் அளித்த குறைந்த வாக்கின் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டார். தொடக்கத்தில் இவர் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று பலரும் கணித்த நிலையில், தன்னுடைய முன் கோபத்தினால் ரசிகர்களின் மனதை கவர தவறிவிட்டார்.

அத்துடன் கானா பாடகியான இசைவாணி தன்னுடைய திறமையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டாமல் இமான் அண்ணாச்சி மற்றும் தாமரையுடன் சண்டை போடுவதில் அதிக நேரத்தை செலவிட்டார். அத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டனர்.

ஆனால் இசைவாணி அவருடைய திருமணத்தையும் அதன் பிறகு விவாகரத்து ஆகாத விசயத்தை துளிக்கூட பகிர்ந்து கொள்ளவில்லை. அதற்கு பதில் சிறுவயதில் போட்டுக் கொள்வதற்கு நல்ல உடை இல்லை, சொந்தவீடு இன்றுவரை இல்லை, அப்பாவிற்கு மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்பதை மட்டுமே பகிர்ந்து கொண்டார்.

ஆனால் இசைவாணிக்கு கானா பாடகர் ஸ்ரீகாந்த் தேவா என்பவருடன் திருமணம் நடைபெற்று, அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி தன்னுடைய திருமணத்தை பிக்பாஸ் வீட்டில் சொல்லாததற்கு காரணம், அந்த விஷயத்தை முழுவதுமாக மறக்க முடிவு செய்துவிட்டேன்.

திருமணத்தினால் மனம் நொந்து வாழ்க்கையையே முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட போது கானா பாடல் ஒன்று மட்டுமே தனக்கு பக்கபலமாக இருந்ததாகவும், தன்னுடைய வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு கானா பாடல்கள்தான் துணையாக இருந்தது என்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி முதன்முதலாக ஓப்பனாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்