இந்த ஒரே டாஸ்க் மூலம் ரசிகர்களை கதற விடப் போகும் பிக் பாஸ்.. அட்ரா சக்க!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி சில வாரங்களுக்கு முன்பு போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களை குறித்து விமர்சிப்பர். இதனால் காரசாரமான நிகழ்வுகளும் நடப்பதுண்டு.

அந்த வகையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 70 நாட்களை கடந்து இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. ஆகையால் யார் யார் பிக்பாஸ் வீட்டில் கடைசிவரை இருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் போட்டியாளர்கள் தங்கள் இருப்பை பிக்பாஸ் வீட்டில் தக்கவைத்துக்கொள்ள தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடுமையான போட்டிகளில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றர்.

எனவே இந்த சீசனில் கூடிய விரைவில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிரீஸ் டாஸ்க் மூலம் உள்ளே வர உள்ளதால் அவர்கள் அனைவரும் கொரோனா  வழிமுறையின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஆகையால் இவர்கள், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை எவ்வாறு தாளித்து எடுக்கப் போகின்றனர் என்பதையும், நீண்ட நாட்களாக பார்க்காமல் இருப்பதால் போட்டியாளர்களை கண்டதும் குடும்பத்தினர் கண்ணீர் மழையில் நனைவதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

ஆனால் வெளியில் இருந்து விட்டால் வீட்டிற்குள் வரவுள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் மூலம் பிக்பாஸ் என்னென்ன டாஸ்க்களை வைத்துள்ளார் என்பதையும் ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கி உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்