நல்லவன் போல் நடித்து திட்டம் தீட்டும் 3 பேர்.. நாணயத்தை வைத்து போர்க்களமாகும் பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது விஜய் டிவியில் அனுதினமும் சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்பப்படுகிறது. இன்னிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அபினை, அக்ஷரா, இசை வாணி, பிரியங்கா, சுருதி, வருண், சின்ன பொண்ணு, பாவனி ரெட்டி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இந்த வாரம் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பஞ்சபூதங்களின் பெயர்களைக் கொண்ட நாணயங்களை கைப்பற்றியவர்களுக்கு சிறப்பு சலுகை பிக்பாஸ் அறிவித்தார். அதாவது நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் பவானி ரெட்டி, வருண், இசைவாணி ஆகியோர் தங்களுக்கு பதில் நாமினேட் ஆகாத வேறு ஒருவரை நாமினேட் செய்துகொள்ளலாம்.

இந்த சலுகை அவர்களுக்கு வழங்கப்பட்டது, ஆனால் அவர்கள் மூவரும் அந்த சலுகையை பயன்படுத்தாமல் நாங்கள் நாமினேஷன் லிஸ்டிலே இருந்து கொள்கிறோம் என்று கூறியது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனென்றால் பாவனி ரெட்டி அந்த சலுகையை பயன்படுத்தி கண்டிப்பாக வேறு ஒருவரை மாற்றி விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவ்வாறு மூவருமே செய்யவில்லை என்றது பிக்பாஸ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்தது.

bb5-contestance-ciemapettai3
bb5-contestance-ciemapettai3

மேலும் நாமினேட் ஆகாதவர்களை நாணயத்தைக் கொண்டு நாமினேட் ஆக வைத்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடித்திருக்கும், அப்படி செய்யாமல் நாணயத்தை வைத்திருந்த மூவரும் ரொம்ப நல்லவர்கள் போன்று நடந்து கொண்டதன் பின்னணியில் ஏதோ பெரிய திட்டம் வைத்துள்ளனர்.

எனவே அதையும் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நாணயத்தை பத்து வாரங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் நாணயத்தை வைத்திருக்கும் ஐந்து பேருக்கு எக்கச்சக்க சலுகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்