கட்டிப்பிடி சினேகனுக்கு பின் வெளியேறும் நபர்.. அடடா! ஆனந்தமாய் மாறும் வீடு

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டோரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதி நாளில் ஒரு நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் நிரூப், தாமரைச்செல்வி, சுருதி, அனிதா சம்பத் , ஜூலி, சதீஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் சதீஷ் மட்டும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்திருந்தார். இன்னிலையில் இந்த நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஆறு பேரில் சுருதி மற்றும் அனிதா சம்பத் இருவருள் ஒருவர் மக்கள் அளித்த ஓட்டிங் அடிப்படையில் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால் சுருதி, ஏற்கனவே பங்கேற்ற பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தவறான முறையில் நாணயத்தை தாமரையிடமிருந்து அபகரித்ததால், அந்த சீசனில் இருந்து இப்பொழுது வரை ரசிகர்களுக்கு சுருதியை சுத்தமாக பிடிக்கவில்லை.

இருப்பினும் ஒரு சிலருக்கு சுருதியின் தைரியமான மற்றும் துணிச்சலான விளையாட்டு பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதைப்போல் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தி வாசிப்பாளராக அனிதா சம்பத், தற்போது கலந்து கொண்டிருக்கும் அல்டிமேட் நிகழ்ச்சியில் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டு வருகிறார்.

ஏனென்றால் திருமணமான பெண் போல் நடந்து கொள்ளாமல், ஆண்களிடம் எல்லை மீறி பேசுவதும், அடிக்கடி நிகழ்ச்சியில் கெட்ட வார்த்தை பயன்படுத்துவதும் அனிதாவை பார்ப்பதற்கே புதிதாக தெரிகிறது.

இவ்வாறு ரசிகர்களின் பார்வையில் குறைத்து எடைபோட படுக்கிற அனிதா சம்பத், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகையால் சுருதி மற்றும் அனிதா சம்பத் இருவருள் யாருக்கு குறைந்த ஓட்டுக்கள் கிடைத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகின்றனர் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்