பிரியங்கா, பாவனி, அமீர் வாங்கிய சம்பளம்.. இந்த சீஸனில் அதிக சம்பளம் வாங்கிய நபர் இவர்தானாம்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்றுடன் நிறைவடைய உள்ளது. 106 நாட்களைக் கடந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் மக்கள் அளித்த அதிக வாக்கின் அடிப்படையில் ராஜு இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆனதுடன் ரூபாய் 50 லட்சம் பரிசுத் தொகையை பெற உள்ளார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாமிடம் பிரியங்காவிற்கு கிடைத்துள்ளது. எனவே பிரியங்காகா ஒரு வாரத்திற்கு 2 லட்சம் சம்பளமாக ஒப்பந்தமாகி உள்ள நிலையில், 16 வாரத்தை வெற்றிகரமாக கடந்து ரூபாய் 28 லட்சத்து 25 ஆயிரம் பெற்று வீடு திரும்புகிறார்.

அவரைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் பெரும் பாவனி மூன்றாம் இடத்தைப் பிடித்து 16 வாரங்களுக்கு மொத்தம் ரூபாய் 20 லட்சத்து 17 ஆயிரம் சம்பளத்துடன் விடைபெறுகிறார். மேலும் நான்காம் இடத்தை பிடித்துள்ள அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு 50 நாட்களை கடந்து பிறகே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

எனவே 8 வாரங்களை நிறைவு செய்த அமீ,ர் ஒருவாரத்திற்கு ரூ. 70, 000 சம்பளத்துடன் மொத்தம் ரூபாய்  5 லட்சத்து 60 ஆயிரத்துடன் விடைபெறுகிறார். அமீர் பிக்பாஸில் வெறும் 56 நாட்கள் மட்டுமே இருந்தாலும் அவர் பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த சீசனில் காதல் ட்ராக்கை ஓட்டி ஆழமாக தன்னுடைய இருப்பை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாவனி இதற்கு இடம் கொடுக்காததால், அந்த ட்ராக் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ள நிரூப், ஒருவாரத்திற்கு  ரூ. 70, 000 சம்பளம் வீதம் 16 வாரத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 20 ஆயிரம் சம்பளம் வாங்கி உள்ளார்.

இவ்வாறு டாப் 5 போட்டியாளர்களான நிரூப், பாவனி, ராஜு, பிரியங்கா, அமீர் ஆகிய ஐந்து பேரில் பிரியங்கா கிட்டத்தட்ட 30 லட்சம் சம்பளம் வாங்கி இந்த சீசனில் அதிகம் சம்பளம் பெறும் நபராக பேசப்பட்டு உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்