பட வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வது.. சிவகார்த்திகேயனுக்கு செம்படித்ததால் வெளுத்து வாங்கிய பயில்வான்

Bayilwan Ranganaathan: பயில்வான் ரங்கநாதன் சமூக வலைத்தளங்களில் பல சினிமா செய்திகளை ரொம்பவும் வெளிப்படையாக பேசி வருபவர். ஒரே நேரத்தில் இவருக்கு பாஸிடிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகளும் இதனால் வருவதுண்டு. சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு சொம்படிப்பது போல் பேசிய நடிகை ஒருவரை வச்சு செய்திருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய ஒரு சில பிரபலங்கள் சிவகார்த்திகேயனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒப்பிட்டு பேசி இருந்தனர். இது அப்போதே பல பிரபலங்களால் கண்டிக்கப்பட்டது. தற்போது பயில்வான் ரங்கநாதன் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Also Read:முத்துவேல் பாண்டியனுக்காக ரெடியாகும் குட்டிக்கதை.. உங்களுக்கு சலச்சவன் நான் இல்ல என்ன முடிவு

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை சரிதா. இவர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மாவீரன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது நான் ரஜினியுடன் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பொழுது எனக்கு அவர் ரஜினியை போல் தான் தெரிந்தார் என்று மேடையில் பேசியிருந்தார்.

பின்னர் அவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் இது பற்றி கேட்ட பொழுது ரஜினியை போல் சிவகார்த்திகேயன் எளிமையாக இருப்பதைத்தான் நான் அப்படி சொன்னேன் என்று சொல்லி பூசி மொழுகி விட்டார். தற்போது ரங்கநாதன், சினிமாவில் நிறைய அனுபவம் நிறைந்த நடிகையாக இருந்து கொண்டு இப்படி சிவகார்த்திகேயனை ரஜினி உடன் ஒப்பிட்டு பேசுவது சரியே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு.. ரஜினியை ஒதுக்கி கமலை மட்டும் வளர்த்து விட்ட பாலச்சந்தர்

ரஜினிகாந்த் அடைந்திருக்கும் உச்சம் மற்றும் அவர் கடந்து வந்த பாதை என்பது வேறு மாதிரியானது. அவருடன் இதுபோன்ற நடிகர்களை ஒப்பிட்டு பேசுவது என்பது சரிதாவுக்கு நல்லதல்ல. திறமையான நடிகையாக அனைவராலும் பார்க்கப்படும் இவர் இப்படி சிவகார்த்திகேயனுக்கு ஜால்ரா அடிப்பது போல் பேசி இருப்பது ரொம்பவும் கண்டிக்கத்தக்கது.

அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாமா ஐஸ் வைப்பது என்று ரொம்பவும் நக்கலாக கேள்வி கேட்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். மேலும் இது போன்று பேசுவதெல்லாம் ரொம்பவே கண்டிக்கத்தக்க விஷயம் என்றும் சொல்லியிருக்கிறார்.

Also Read:40 வருட அனுபவத்தை 30 நிமிடங்களில் காட்டிய சூப்பர் ஸ்டார்.. பற்றி எரிந்த விஜய், ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்