ஆண்களை படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்கள்.. வெளிப்படையாக கூறிய பயில்வான்

சினிமா படங்களில் புதுமுகமாக அறிமுகமாக வேண்டும் என்றால் பலவித இன்னல்களை சந்திக்க வேண்டும் என்று பலர் கூறி நாம் கேட்டிருப்போம். சினிமாவில் ஜெயித்தவர்கள் கதையை மட்டும் கேட்டு பழகிப்போன நமக்கு, தோற்றுப் போனவர்களின் கதை ஏனோ பெரிதாக தெரிவதில்லை. அப்படி இந்த சினிமா துறையை நம்பி படத்தில் நடித்து பெரிய நடிகராக வேண்டும் என்று நினைத்து ஏமாந்து போனவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர். அப்படி ஏமாந்தவர்கள் பணத்தையோ பொருளையோ ஏமாந்து இருந்தால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம்.

ஆனால், மானத்தை விட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது அதில் சிக்கியும் ஏமாந்தும் போய் இருக்கின்றனர். படத்தில் நடிக்க சான்ஸ் கொடுக்க வேண்டும் என்றால் நான் சொல்வது போல நீ கேட்கவேண்டும் என்று பல இயக்குனர்கள் நடிகைகளை தொந்தரவு செய்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அப்படி அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக் கொண்டால் தான் நீ சினிமாவில் நிலைக்க முடியும் என்று கூறி பல நடிகைகளின் வாழ்வு வீணாகும் அவலம் குறித்தும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இடையில் வந்த Metoo விவகாரத்தில் கூட ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஆடிப்போய் விட்டது. அந்த சமயத்தில் அடுத்தடுத்த புகார்கள் இந்த Metoo மூலமாக வெளியானது. பல ஹீரோயின்கள் எங்களுக்கு இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் சினிமா துறையில் இருந்தது என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தனர். இப்படி இருக்கையில் இது பெண்களுக்கு மட்டும் தான் நடக்கிறது என்று கூறினால் இல்லை, தற்போது ஆண்களுக்கும் அதிகமான அளவில் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் அதிகமாகிவிட்டது. தற்போது, சினிமாவிற்கு நடிக்க வரும் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறி அதிர வைக்கின்றனர்.

புது முகங்களாக தங்களின் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று வரும் இளைஞர்களிடம் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பணம் கொடு அப்போது தான் உனக்கு சான்ஸ் என்று முதலில் கேட்கின்றனர். அதன் பிறகு பணம் இல்லை என்றால் சினிமா துறையில் எதுவும் நீங்கள் செய்யமுடியாது என்று கூறி அவர்களின் நம்பிக்கையை உடைக்கின்றனர். ஒருபடி மேலே சென்று நீ எங்களுக்கு அட்ஜஸ்ட் செய்தால் உனக்கு தேவையான சான்ஸை நாங்கள் தருகிறோம் என்று தவறான வழிகளுக்கு அவர்களை இழுக்கின்றனர்.

அதில் சிலர் சான்ஸ் கிடைத்தால் போதும் அதன் பிறகு நாம் பெரிய ஹீரோவாகி விடலாம் என்ற கனவில் பலரும் அவர்கள் கேட்கும் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஓகே சொல்லி விடுகின்றனர். அனைத்தும் முடிந்த பிறகு பெண் நடிகைகளை எப்படி கழட்டி விடுகிறார்களோ அதே போல இவர்களையும் கழட்டி விட்டு விடுகின்றனர், சில ஏமாற்றுப்பேர்வழிகள். இதை அறியாத பல இளம் இளைஞர்கள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வைத்துக் கொண்டு இது போன்ற காம வெறி பிடித்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சிக்கி சின்னாப்பின்னமாகி இருக்கின்றனர். இந்த மாதிரி சினிமா துறையில் நடப்பதாக எதற்கும் பயப்படாமல் துணிந்து பேசும் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்